கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களில் ஜாதி, மத அடையாளங்களை கட்டாயமாக குறிப்பிடச் சொல்லக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த விக்ரமன் தாக்கல் செய்த மனுவில், தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் ஜாதி உள்ளிட்ட சமூக விவரங்களை கேட்பதால் சேர்க்கை நடைமுறையில் பாகுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கு இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது. அரசாணையை கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்து, மாணவர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.



















