• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

January 21, 2022
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

September 5, 2026
48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

September 5, 2026
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, September 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

by Namadhu Amma
January 21, 2022
in சிறப்பு செய்திகள்
0
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சேலம்

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது என்றும், தரமற்ற பொருட்களை வழங்கி தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி விட்டது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம், எடப்பாடி பயணியர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்டாலின் தலைமையில் உள்ள தி.மு.க. அரசு தைத்திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 தொகுப்புகள் அடங்கிய பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு பொங்கல் தொகுப்பை நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கினார்கள்.

அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் இடம்பெறவில்லை. பல்வேறு மாவட்டங்களில் 15, 16, 17 பொருட்கள் தான் வழங்கப்பட்டது. அரசு அறிவித்த மாதிரி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்களும் முழுமையாக வழங்கப்படவில்லை.

வழங்கப்பட்ட பொருளும் தரமாக இல்லை. தரமற்ற பொருட்களை வழங்கி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். அந்த பொங்கல் தொகுப்பில் கொடுக்கப்பட்ட பொருட்கள் எடை குறைவாக இருக்கின்றன. முந்திரி 50 கிராம் இருக்க வேண்டும். ஆனால் 30 கிராம், 35 கிராம் தான் இருக்கிறது. திராட்சை 50 கிராம் இருக்க வேண்டும். ஆனால் 30 கிராம் தான் உள்ளது.

இப்படி எல்லாமே எடை குறைவான பொருட்களை தான் நியாய விலை கடை மூலமாக பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்டது. மிகப்பெரிய முறைகேடு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டதில் நடந்துள்ளது.

மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த பொங்கல் தொகுப்புக்கு மட்டும் கொள்முதல் செய்தது சுமார் ரூ.1300 கோடி, இந்த 1300 கோடி ரூபாய் பொங்கல் தொகுப்பு செய்ததிலே, இந்த தி.மு.க. அரசாங்கம் சுமார் 500 கோடி ரூபாய் முறைகேடாக ஊழல் செய்தது அவர்கள் வழங்கிய பொருட்களிலேயே தெரிகிறது.

எடை குறைவாக வழங்கப்பட்டது. தரமற்ற பொருட்கள் கொடுத்ததோடு கரும்பு கொள்முதலில் மட்டும் ஒரு கரும்பு 33 ரூபாய் என்று அரசு அறிவித்தது. ஆனால் கொள்முதல் செய்த விலை உச்சபட்சமாக 16 ரூபாய் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ஒரு கரும்பில் 17 ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது, அப்படி கரும்பு கொள்முதலில் மட்டும் 34 கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாக தெரிய வருகிறது.

அதோடு மஞ்சள்தூள், மிளகாய் தூள் இவையெல்லாம் கலப்படமாக உள்ளது. எதையுமே உணவு பொருளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. அரிசி, கோதுமை, ரவை இவைகளில் எல்லாம் பூச்சி, வண்டுகள் ஓடுவதை சமூக வலைதளங்களில் காண முடிந்தது.

அதோடு புளியில் ஒரு பல்லி விழுந்து கிடந்தது. அதை அறிவித்தவர் மீது ஜாமீனில் வர முடியாத வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடைய மகன் தன் அப்பா மீது இப்படி ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எண்ணி அந்த மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்டதில் ஒரு உயிரை பறி கொடுத்துள்ளோம்.

ஒரு பெண்மணி சமூக வலை தளத்தில் வெல்லம் ஒழுகியதை காண்பித்தார். அதை நான் ஏற்கனவே பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் காண்பித்தேன். அவ்வளவு தரமற்ற வெல்லத்தை கொடுத்துள்ளார்கள், அந்த வெல்லத்தை வைத்து பொங்கல் வைக்க தகுதியற்றது. அதேபோல் திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சித்தலைவரே ஆய்வுசெய்து 2.5 டன் தரமற்ற வெல்லத்தை கண்டுபிடித்து தடை செய்துள்ளார்.

இதுவே இதற்கு ஆதாரம். அதோடு பொங்கல் தொகுப்பு கொடுப்பதற்கு பை தரப்படும் என்று அறிவித்தார்கள், அந்த பையும் கொடுக்கவில்லை, பாதி பேருக்குதான் கிடைத்துள்ளது, பாதி பேருக்கு கிடைக்கவில்லை. அந்த பையின் விலை 60 ரூபாய் என்று சொல்கிறார்கள்.

ஆனால் அந்த பையின் விலை ரூ.25 அல்லது 30 தான் இருக்கும். இந்த பொங்கல் தொகுப்புக்காக கொடுக்கப்பட்ட பையில் மட்டும் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தெரிய வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் தொகுப்பு பெற்ற மக்கள் கொதிப்படைந்து இருக்கின்றார்கள். இந்த பொங்கல் பண்டிகை தான் கிராமத்திலிருந்து நகரம் வரை மிகச்சிறப்பாக, எழுச்சியாக தமிழன் கொண்டாடக்கூடிய மிகப்பெரிய பண்டிகை. அந்த பண்டிகையை இந்த ஆண்டு மக்கள் முழுமையாக கொண்டாட முடியவில்லை.

இவர்கள் கொடுத்த பொங்கல் தொகுப்பு அந்த அளவுக்கு தரமற்றதாக இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இப்படி கொடுத்துள்ளார்கள். ஒரு சில பத்திரிகைகளை தவிர ஊடகங்களில் இந்த செய்தி எங்கேயுமே காண்பிக்கப்படவில்லை. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் மக்கள் கொதித்துப் போய்இருக்கிறார்கள். இந்த பொங்கல் தொகுப்பு கொடுத்ததிலே மிகப்பெரிய முறைகேடு நடந்து இருக்கிறது. முழுமையான பொருள் கிடைக்கவில்லை, தரமான பொருள் கிடைக்கவில்லை, எடை சரியில்லை. இது எல்லாம் ஊடகங்களில் வெளி வரவில்லை. இதை விவாத மேடைகளில் விவாதிக்கவில்லை. ஆனால் கழகம் ஆளுகின்ற பொழுதும், எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுதும் விமர்சனம் செய்கிறீர்கள் விவாத மேடையில், ஆனால் இவ்வளவு பெரிய முறைகேடு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து எந்த ஒரு தொலைக்காட்சியிலும், விவாத மேடையில் விவாதிக்கவில்லை. இது வருந்தத்தக்கது. ஆனால் சமூக வலைதளங்களில் என்னென்ன முறைகேடுகள் எல்லாம் நடந்துள்ளதோ யூடியூப், டுவிட்டர்களில் மிகப்பெரிய அளவில் வைரலாக பரவி தி.மு.க. ஆட்சியில் பொங்கல் தொகுப்பு கொடுத்ததில் முறைகேடு, ஊழல் நடந்திருப்பதை பார்க்க முடிகிறது.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.