• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் விருப்பம் -முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் விருப்பம் -முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

July 26, 2022
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்|மற்றவை

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் விருப்பம் -முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

by Namadhu Amma
July 26, 2022
in தற்போதைய செய்திகள்|மற்றவை
0
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் விருப்பம் -முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

விருதுநகர்,

மக்களை பற்றி ஸ்டாலின் கவலைபடுவதில்லை. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்ற சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து

விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகாசி பாவாடி தோப்பு பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

அம்மாவுடைய காலத்துக்கு பிறகு தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் எடப்பாடியார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு கிடையாது, மின் கட்டண உயர்வு கிடையாது, பஸ் கட்டணம் உயர்வு கிடையாது, விலைவாசி உயர்வு கிடையாது. ஏழைகளை பாதிக்கின்ற எந்த செயலையும் அம்மாவுடைய அரசு செயல்படுத்தவில்லை.

இன்றைக்கு ஆளுகின்ற திமுக அரசு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களைப் பற்றி கவலைப்படாமல் விலைவாசி உயர்வு பற்றி கவலைப்படாமல் விளையாட்டு மோகத்தில் இருக்கின்றார். விளையாட்டுப் போட்டிகளுக்கு போஸ் கொடுத்து கண்டு களிக்கின்றார்.

சிவகாசி மாநகராட்சியில் கூலித்தொழிலாளர்கள், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் அதிகம் வாழ்கின்றனர். இன்றைக்கு திடீரென்று மின் கட்டணம், சொத்து வரியை நீங்கள் உயர்த்தினால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மின்கட்டணம் உயர்வு, சொத்து வரியை உயர்வை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்.

சிவகாசியில் தற்போது பட்டாசு, தீப்பெட்டி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றது. இதில் மின்கட்டணம் உயர்வு, சொத்து வரியை நீங்கள் கூட்டினால் பெரிய பாதிப்பை சிவகாசி மக்கள் சந்திப்பார்கள். மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டித் தொழில் முற்றிலும் முடங்கி போய் உள்ளது.

இன்று பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டு இருக்கின்ற நெருக்கடியான சூழ்நிலையை யாருமே கண்டு கொள்ளவில்லை. பட்டாசு, தீப்பெட்டி, விவசாய தொழிலையோ யாருமே கண்டு கொள்ளவே இல்லை. பட்டாசு தொழிலாளர்கள் வேலை இன்றி வீதியில் நிற்கின்றனர். பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் பாதிப்பு பற்றி டெல்லியில் போய் பேசுவதற்கு இங்குள்ள அமைச்சர்களுக்கு திராணி கிடையாது.

இருப்பதை சுருட்டிக் கொண்டு ஓடி விடுவோம் என்று நினைப்பில் தான் ஆட்சி நடத்துகின்றனர். எந்தவிதமான நல்லவிதமான மக்கள் திட்டங்களை செய்வது கிடையாது. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்தி மத்திய அரசை கேவலப்படுத்துகின்ற வேலையில் தான் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசிடம் பேசி ஏராளமான நிதிகளை பெற்று தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்கு திமுகவில் ஆள் இல்லை. இப்போது இருக்கின்ற நிலைமை மாற வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் வேண்டும்.

அதற்கு அடித்தளமாக விளங்கக் கூடியவர்கள் தமிழக மக்கள். திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை சொல்லக்கூடிய விதமாகத்தான் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நடந்தால் வரி என எதற்கெடுத்தாலும் வரி விதித்தால் எப்படித்தான் சாப்பிடுவது. ஆளுகின்ற திமுக அரசு மக்கள் நலனில் கருத்தில் கொண்டு மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பால் விலை, ஆவின் விலை உயர்வு என எதையும் திமுக கூட்டணி கட்சி கேட்க தயாராக இல்லை. இதை எதிர்த்து கேட்கும் கட்சியாக அதிமுக மட்டுமே உள்ளது. இத்தகைய நிலை மாற வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் வர வேண்டும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.