உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய அரசு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்தியதற்காக, உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ், பிரதமர் மோடிக்கு “ஒலிய் தராஜலி தோஸ்த்லிக்” (Oliy Darajali Do’stlik – Order of Highest Friendship) விருதை வழங்கினார். இது வெளிநாட்டு தலைவர்களுக்கு உஸ்பெகிஸ்தான் வழங்கும் மிக உயரிய கௌரவமாகும்.
இந்த விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, இதனை இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த விருது இந்தியா–உஸ்பெகிஸ்தான் இடையேயான நீண்டகால நட்பு மற்றும் இரு நாடுகளின் பகிரப்பட்ட நாகரிக உறவின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பயணத்தின்போது இந்தியா–உஸ்பெகிஸ்தான் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, டிஜிட்டல் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவுக்கு நீண்டகால அடிப்படையில் யுரேனியம் வழங்குவதற்கான முக்கிய ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.


















