• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கழக உறுப்பினர்கள் சரமாரி கேள்வி- உள்ளிருப்பு போராட்டம்

கழக உறுப்பினர்கள் சரமாரி கேள்வி- உள்ளிருப்பு போராட்டம்

June 30, 2022
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.2,320 அதிகரிப்பு

September 3, 2026
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

September 3, 2026
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

September 3, 2026
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

September 3, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம்!

September 3, 2026
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home மாவட்ட செய்திகள்>தர்மபுரி

கழக உறுப்பினர்கள் சரமாரி கேள்வி- உள்ளிருப்பு போராட்டம்

by Namadhu Amma
June 30, 2022
in மாவட்ட செய்திகள்>தர்மபுரி
0
கழக உறுப்பினர்கள் சரமாரி கேள்வி- உள்ளிருப்பு போராட்டம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

நகர்மன்ற திமுக தலைவர் பாதியில் ஓட்டம்

தருமபுரி

தருமபுரி நகர்மன்ற கூட்டத்தில் பணிகள் ஒதுக்குவதில், பாரபட்சம் காட்டுவதாக, திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் கேள்வி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் தி.மு.க நகர் மன்ற தலைவர், நகராட்சி ஆணையாளர் ஓட்டம் பிடித்தனர்.

தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தி.மு.க நகராட்சி தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கியவுடன் தீர்மானங்களை வாசித்து வந்தனர். அப்பொழுது திடீரென அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கழக உறுப்பினர்கள் என்னென்ன தீர்மானங்கள் என தெரிவிக்க வேண்டும். கழக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முறையாக பணிகள் ஒதுக்குவதில்லை என நகர்மன்ற தலைவரிடம் கேள்வி கேட்டனர்.

இதனால் தலைவர் மற்றும் கழக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கழக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திமுக நகர்மன்ற தலைவர் லட்சுமி மற்றும் ஆணையாளர் சித்ரா இருவரும் திடீரென எழுந்து ஓட்டம் பிடித்தனர்.

இதனால் கழக உறுப்பினர்கள் 13பேர் நகர் மன்ற கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து வந்த நகர்மன்ற தலைவர், 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள் வந்துள்ளது என்று தெரிவித்தார்.

இதில் பணிகளுக்கான ஒப்பந்தம் பெறப்பட்டு பணிகள் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் தங்கள் பகுதியில் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை எனக்கூறி கழக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திமுக நகர்மன்ற தலைவரின் கணவர் மாது பதில் கூறினார். இதனால் திமுகவினரின் அத்துமீறலால் கழக உறுப்பினர்களுக்கும், திமுக நகர்மன்ற தலைவர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்பொழுது திமுக உறுப்பினர்களும், எங்கள் பகுதிக்கு கூட பணிகள் ஒதுக்கவில்லை. ஆனால் அதிமுக பகுதிக்கு தான் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இந்நிலையில் மேலும் அதிமுக, திமுக மன்ற உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது.

இதனைத்தொடர்ந்து நகர் மன்ற தலைவர் கணவர் மாது, பணிகள் நடைபெறுவதற்காக ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளது, பணிகளை தொடங்குவதற்கு கால தாமதமாகும் என தெரிவித்தார்.

இதனை அடுத்து திடீரென நகர் மன்ற அலுவலகத்திற்கு காவல்துறையினர் வந்தனர். இதனை கண்ட கழக மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகள் தேவைகளை நகர்மன்ற அலுவலகத்தில் கேட்கும் பொழுது கழக உறுப்பினர்களை கைது செய்வதற்காக காவல் துறையினரை வரவழைத்து உள்ளனர்.

நகர் மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதிக்கான தேவைகளை கூட கேட்க விடாமல் அச்சுறுத்தும் விதமாக நகர் மன்ற தலைவர் நடந்து கொள்கிறார் என்று கழக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம், காவல் துறையினர் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி நகராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளும் திமுகவினரே தன்னிச்சையாக செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் நகர்மன்ற தலைவராக உள்ள லட்சுமி அவரது கணவர் மாதுவின் அதிகாரப்போக்கு, சர்வாதிகாரப் போக்கு நகராட்சியில் உள்ளது. இதனால் சடங்குக்காக நகரமன்ற கூட்டம் நடத்தப்படுகிறது.

நகராட்சியில் 33 வார்டுகளில் கழக உறுப்பினர்கள் உள்ள 13 வார்டுகளில் எவ்வித பணிகளும் நடைபெறுவதில்லை. முறையாக சாக்கடை அள்ளுவதில்லை கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இது மட்டும் அல்லாமல் திமுகவினர், தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வதால், தி.மு.கவினர் மீது கழக உறுப்பினர்களும் பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து தருமபுரி நகராட்சி 6-வது வார்டு மன்ற உறுப்பினர் முன்னா மற்றும் கழக உறுப்பினர்கள் ராஜாத்தி ரவி, செந்தில் வேல், மாதையன் ஆகியோர் கூறுகையில்

தனது வார்டுக்கு குப்பை அகற்றுவதற்கு கழிவுநீர் கால்வாய் சாக்கடை துப்புரவு பணிக்கு ஆட்கள் வருவதில்லை என்றும் தொடர்ந்து பலமுறை கூறியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக கவுன்சிலர்கள் வார்டுகளில் மட்டும் நகராட்சியில் அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். அவரின் பேச்சுக்கு திமுக கவுன்சிலர்கள் மறுப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர்.

நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தனது வார்டில் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை என்றும் மற்றவர்களுக்கு பணிகள் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார். 6வது வார்டு பகுதியில் பணி நடைபெறவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.