பிரதமர் நரேந்திர மோடி, உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டார்.
முதற்கட்டமாக ஆகஸ்ட் 29, 30-ல் உஸ்பெகிஸ்தான் செல்லும் மோடி, அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ல் கிர்கிஸ்தான் செல்லும் அவர், பிஷ்கெக்கில் நடைபெறும் 26-வது SCO உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார். பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்தப் பயணம் மூலம் மத்திய ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















