நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் நிலச்சரிவால் உருவான தடுப்பு ஏரியில் நீர்மட்டம் அதிகரித்து, தற்போது அது நிரம்பி வழியத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாட்டேகோஷி உள்ளிட்ட ஆறுகளின் கீழ்ப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், அடுத்த அறிவிப்பு வரும் வரை மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், ஆற்றுப் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிற வழிகளில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


















