தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ.5 மற்றும் ரூ.10 வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அதிகாரிகள் பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 150 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.


















