மதுரை
போற்றுதலுக்குரிய பி.கே.மூக்கையாத்தேவரின் 43-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் வீர அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசியலிலும், பொதுச்சேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றியவரும், கல்விப்பணிகளில் அதிக நாட்டம் கொண்டவருமான, போற்றுதலுக்குரிய திரு. பி.கே.மூக்கையாத்தேவரின் 43-வது நினைவு நாளான நேற்று காலை மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் மூக்கையாத் தேவர் நினைவிடத்தில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ, கழக பொருளாளரும்,
திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ,
கழக புரட்சித்தலைவி பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளர். எஸ்.டி.கே.ஜக்கையன், மேலூர் தொகுதி பி.பெரியபுள்ளான் (எ) செல்வம்,எம்.எல்.ஏ., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
மூக்கையாத்தேவருக்கு வீர அஞ்சலி செலுத்திய இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. சிறப்பான முறையில் செய்திருந்தார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலோடு இந்த செய்தி வெளியிடப்படுகிறது.
இவ்வாறு தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தி.விலக்கு பகுதியிலிருந்து கழகத்தினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடம் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி, நீதிபதி, தமிழரசன் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகள், இளைஞர்கள், கழக செயல்வீரர்கள் செயல் வீராங்கனைகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தென் மாவட்டங்களில் தனக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பது போல் ஓபிஎஸ் மாய தோற்றத்தை உருவாக்கி இருந்தார். ஆனால் அந்த தோற்றத்தை சுக்கு நூறாக உடைக்கும் வண்ணமும், தென் மாவட்டத்தில் எடப்பாடியாருக்கு மிகப்பெரிய ஆதரவு அலை, செல்வாக்கு ஆகியவற்றை நிரூபிக்கும் வகையிலும் இந்த கூட்டம் அமைந்திருந்தது என்று பத்திரிகை ஊடகங்கள், அரசியல் வல்லுனர்கள் வெளிப்படையாக கூறினர்.


















