நாடு முழுவதும் இன்று (செப். 5) ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பை பாராட்டியுள்ளார்.
ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் உயர்ந்த வாழ்வியல் மதிப்புகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களுக்கான நல்வழி அரசியலை அதிமுக எனும் பேரியக்கத்தின் வாயிலாக கற்றுத் தந்த அரசியல் ஆசான்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரை இந்த நாளில் போற்றி வணங்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.












