• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து விட்டது விடியா அரசு

கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து விட்டது விடியா அரசு

September 13, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, March 30, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து விட்டது விடியா அரசு

by Namadhu Amma
September 13, 2022
in தற்போதைய செய்திகள்
0
கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து விட்டது விடியா அரசு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

அமைச்சருக்கு, கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலடி

மதுரை

கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த கண்டனத்தை விடியா தி.மு.க. அரசு மறைத்து விட்டது என்று மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலடி கொடுத்துள்ளார்.

கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் மக்களிடத்தில் பல்வேறு குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

மக்களிடத்தில் குறைகளை கேட்கும் போது, அதில் முதல் கோரிக்கை மின்கட்டண உயர்த்தி எங்களை தி.மு.க அரசு வஞ்சித்து விட்டதே என்று எங்களிடம் மக்கள் பொங்கி எழுந்தனர். மின் கட்டணத்தை உயர்த்திய மக்கள் விரோத தி.மு.க. அரசை கண்டித்து எடப்பாடியார் ஆணைக்கிணங்க, தமிழக முழுவதும் 75 மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டார். அவருக்கு சில கேள்வியை நான் முன் வைக்கிறேன்.

கொரோனா தொற்று சூழ்நிலையில் இருந்து, பழைய நிலைமைக்கு மாற மக்கள் இன்னும் முழுமை அடையவில்லை, ஆனால் தற்போது மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. கடந்த 2011 தி.மு.க ஆட்சியில், தமிழகம் இருளில் மூழ்கி இருந்தது.

அதனை தொடர்ந்து, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினார். அதனை தொடர்ந்து எடப்பாடியாரும் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக செயல்படுத்தி தங்கு தடையின்றி மின்சாரத்தை வழங்கினார்.

மத்திய அரசும் அழுத்தம் கொடுத்தால் கூட அதை மக்கள் மீது சுமத்தாமல், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் அம்மா ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 3 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். ஆனால் தமிழக அரசு கருத்து கேட்கும் கூட்டத்தில் மக்கள் கண்டனத்தை தெரிவித்தனர். அதையெல்லாம் மறைத்து விட்டனர். மின் கட்டண உயர்வை யாராவது ஆதரித்து கருத்து தெரிவித்தால் அதை வெளியிட இந்த விடியா தி.மு.க. அரசு தயாரா?

தற்போது திமுக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. குறிப்பாக ஒரு யூனிட் மின் கட்டணம் 27.50 காசு முதல் ரூ1.25 வரை உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது, சில பிரிவினருக்கு 52 சதவீதம் வரை மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. இதில் 100 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்படைவார்கள்,

சேவை கட்டணம், மீட்டர் காப்பு தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம் என புதிதாக மும்முனை மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் கடந்த 2018ம் ஆண்டில் ரூ.7,450 ஆக இருந்தது. ஆனால் தற்போது அந்த கட்டணம் ரூ.54,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டை ஒப்பிடும்போது 625 சதவீதம் அதிகமாக இது உள்ளது.

அதேபோல் தொடர்ந்து 2018ம் ஆண்டு புதிய ஒருமுனை மின் இணைப்பு பெறுவதற்கு 1,600 ரூபாய் கட்டணம் இருந்தது. தற்போது ரூ 9,250 அதிகரிக்கப்பட்டுள்ளது கடந்த 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 501 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த புதிய மின் கட்டணம் உயர்வின் படி இரு மாதங்கள் சேர்ந்து வீடுகளில் 401 முதல் 500 வரை யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் தான் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர் தற்போது 500 யூனிட் பயன்படுத்தினால் 1,130 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் தற்போது மின் கட்டண உயர்வால் 1,725 ரூபாய்கட்டணம் செலுத்த வேண்டும் இது 52.60 சதவீதம் அதிகமாகும்,

மின்கட்டண உயர்வால் தொழில் முனைவோர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள், குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாக தமிழகத்தில் 2.26 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன. இந்த மின் கட்டண உயர்வால் அந்த நிறுவனங்கள் பாதிப்படைந்து அங்கு பணிபுரியும் தொழிலாளருக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும்,

அதேபோல் வணிக நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வால் 20 லட்சம் நிறுவனங்கள் பாதிப்படையும் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும். குறிப்பாக தமிழகத்தில் மறைமுகமாக விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சர் அண்டை மாநிலங்களை ஒப்பிட்டும், மத்திய அரசு மீது பழியை சுமத்தி, மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி பேசுகிறார். அப்படி ஒப்பிட்டு பார்க்க விரும்புவோர் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மின் கட்டணம் எப்படி இருந்தது.

தற்போது நீங்கள் எவ்வளவு விலை ஏற்றம் செய்துள்ளது என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்படி ஒப்பீடு என்றால் தமிழகத்தில் தொடங்க தயாராக இருந்த இரண்டு நிறுவனங்கள், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றது அதை நீங்கள் ஒப்பிட்டு கூறுவது தானே.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்று 2016ம் ஆண்டில் ஒரு கோடி மக்கள் பயன்பெறும் வண்ணம் 100 யூனிட் மின்சாரம், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கும் 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது 700 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு 70 பைசா அதிகரித்து பட்டுள்ளது. குறிப்பாக விசைத்தறிக்கு கூடுதலாக 32 சதவீதம் இதன் மூலம் மின் கட்டணம் அதிகரிக்கும். இதனால் அவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் நெசவாளர்களுக்கு மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினீர்கள்.

அதற்கு மாறாக மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். மதுரை மாவட்டத்தில் 12,000 நெசவாளர் குடும்பங்கள் மிகவும் பாதிப்படையும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார்

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.