• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் பயனளிக்கும் திட்டங்களையே தி.மு.க. அரசு கொண்டு வரும்

கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் பயனளிக்கும் திட்டங்களையே தி.மு.க. அரசு கொண்டு வரும்

August 12, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, March 30, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் பயனளிக்கும் திட்டங்களையே தி.மு.க. அரசு கொண்டு வரும்

by Namadhu Amma
August 12, 2022
in தற்போதைய செய்திகள்
0
கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் பயனளிக்கும் திட்டங்களையே தி.மு.க. அரசு கொண்டு வரும்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடும் தாக்கு

மயிலாடுதுறை

கட்சிக்கும், கோபாலபுரத்திற்கும் என்ன லாபம் கிடைக்கும் என்று கணக்கு போட்டுத்தான் திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வரும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறி உள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழக வளர்ச்சி பணி குறித்து நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக அவைத்தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர கழக செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் வரவேற்புரையாற்றினார்.

கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.கே.சந்திரசேகரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம் கே.ரவிச்சந்திரன், வைத்தீஸ்வரன் கோவில் பேரூர் கழக செயலாளர் போகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக அமைப்பு செயலாளரும், நாகை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட துணை செயலாளர் வா.செல்லையன், மாவட்ட மகளிரணி செயலாளர் மா.சக்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், நாகை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது என்ன பொய் வழக்கு போடலாம் என துருவி துருவி பார்க்கிறது விடியா தி.மு.க. அரசு. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார், ஸ்டாலின் அவர்களே நான் பழைய பழனிச்சாமி என்று எண்ணி விடாதீர்கள் என எச்சரித்தார்.

தி.மு.க ஒரு திட்டத்தை அமல்படுத்துவது என்றால் இந்த திட்டத்தால் கட்சிக்கு என்ன லாபம். கோபாலபுரத்திற்கு என்ன லாபம் என கணக்கு போட்டு திட்டத்தை தி.மு.க கொண்டு வரும். ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் இந்த சமுதாயத்துக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தவர்கள்.

உதாரணமாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலையில் அரசு பள்ளியில் படித்திருக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தார். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவம், பல் மருத்துவம் என 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.

அதோடு மட்டுமில்லாமல் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்தவர் எடப்பாடியார். ஆனால் விடியா தி.மு.க. அரசு என்பது கருணாநிதி காலத்தில் சரி, ஸ்டாலின் காலத்திலும் சரி மக்களுக்கு பயன்படாத ஒத்துப்போகாத திட்டங்களை தான் கொண்டு வந்திருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினருக்கான நிதி ஏப்ரல் மாதம் பட்ஜெட் அறிவித்த நிலையில் 5 மாத காலம் ஆகியும் 5 பைசா கூட எந்த சட்டமன்ற உறுப்பினர் நிதியும் வரவில்லை. கையாலாகாத விடியா தி.மு.க. அரசு என அ.தி.மு.க.வை குறை சொல்கிறது. விடியா தி.மு.க அரசு தற்போது நிதியை பெருக்க முடியாமல் ைகேயந்தும் நிலைக்கு சென்று இருக்கிறது.

ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு என கூவிய தி.மு.க உலக செஸ் போட்டி தொடக்க விழாவுக்கு வந்த பிரதமரை ஒன்றிய அரசின் பிரதமர் என்று சொல்லாமல், இந்திய பிரதமர் என கூறினார். ஸ்டாலின் இப்பொழுது மத்திய அரசு எனக்கூறியதை காலில் விழுந்ததாக எண்ணுவதா அல்லது கையை பிடித்ததாக எண்ணுவதா,

நடிக்கிற கட்சி தி.மு.க. திரை உலகத்தில் நடித்து புகழ் பெற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியில் மக்கள் முன் நடிக்காதவர் புரட்சிதலைவர். ஆனால் நடிக்காத தி.மு.க.வினர் இன்று மிகப்பெரிய நடிகராக நடிக்கிறார்கள். தமிழகத்தில் இப்போது சட்டம், ஒழுங்கு சீர்கேடால் லாக்கப் மரணம், பாலியல் மரணம், பாலியல் சீண்டல், தற்கொலை தலைவிரித்து ஆடுகிறது

இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி நடத்துகிற மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் நான் தான் என அவரே கூறிக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. மேலும் விவசாயம், மீன்வளம், மற்றும் எந்த துறையாக இருந்தாலும் தி.மு.க அரசு நாமம் தான் போடுகிறது.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், நாகை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.