• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிப்பதில் விடியா தி.மு.க. அரசுக்கு தான் முதலிடம்

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிப்பதில் விடியா தி.மு.க. அரசுக்கு தான் முதலிடம்

June 11, 2022
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.2,320 அதிகரிப்பு

September 3, 2026
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்

September 3, 2026
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

September 3, 2026
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

September 3, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம்!

September 3, 2026
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தமிழகம்

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிப்பதில் விடியா தி.மு.க. அரசுக்கு தான் முதலிடம்

by Namadhu Amma
June 11, 2022
in தமிழகம்
0
சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிப்பதில் விடியா தி.மு.க. அரசுக்கு தான் முதலிடம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

தருமபுரி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதியில் நடைபெற்ற கழக கொடியேற்று விழா, கோவில் கும்பாபிஷேக பெருவிழா ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்க நேற்று காலை வருகை தந்த கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் எச்.புதுப்பட்டியில் தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள 33 அடி கொடி கம்பத்தில் கழக கொடியை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஏற்றி வைத்தார்.

அதைத்தொடர்ந்த அங்கிருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு, தருமபுரி மாவட்ட கழக பொருளாளர் நல்லத்தம்பி வெள்ளி வீரவாளை நினைவு பரிசாக வழங்கினார்.

கழகத்தினர் சிறப்பான வரவேற்பை ஏற்றுக்கொண்ட கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தெரிவித்தது போல் கழக அரசு 100 ஆண்டு காலம், அதற்கு மேலும் சிறப்பாக செயல்படும். அம்மா மறைவிற்கு பின்பு அ.தி.மு.க., ஆட்சி ஓரிரு, மாதங்களில் கலைந்து விடும் என்று அப்போது ஸ்டாலின் தெரிவித்து வந்தார். ஆனால் பொதுமக்கள் ஒத்துழைப்போடு நான்காண்டு முழுவதும் சிறப்பான ஆட்சியை வழங்கினோம்.

தி.மு.க., தற்போது ஏதோ சந்தடி சாக்கில் ஆட்சிக்கு வந்து விட்டது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எந்த விதமான புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. கழக அரசால், நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் தற்போது ஸ்டாலின் திறந்து வைத்து கொண்டிருக்கிறார்.

நான் போட்ட திட்டங்களுக்கு தான் அடிக்கல் நாட்டி கொண்டிருக்கிறார். அனைவரும் கூறுவது போல் ஸ்டிக்கர் ஓட்டுகின்ற வேலையைத்தான் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.

கழக ஆட்சியில் கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் நகரங்களுக்கு இணையான திட்டங்களை, கிராமங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தியது. தரமான சாலைகள் அமைக்க திட்டம், வேளாண் பெருமக்கள் பயன்படும் வகையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் குடிமராமத்து திட்டங்கள் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது தி.மு.க., ஆட்சியில் இத்திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் எதையும் தற்போது வரை நிறைவேற்றவில்லை. இல்லம் தோறும், குடும்ப தலைவிகளுக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு கல்வி கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை.

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்து அதற்கு பல்வேறு புதிய விதிமுறைகளை வகுத்து, 48 லட்சம் பேர் ஸ்டாலின் வாக்குறுதியை நம்பி, ஐந்து சவரன் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து அந்தப் பணத்தை செலவு செய்துவிட்டு தற்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள். தற்போது, 13 லட்சம் பேருக்கு தான் நகை கடன் தள்ளுபடி என்று கூறுகிறார்கள்.

அதிமுக அரசு எப்போதுமே பொதுமக்களுக்கு துணை நிற்கும். கழக ஆட்சியில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் புதிய அரசு கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

அனைத்திலும் முதல் இடம் என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க. அரசு லஞ்சத்திலும், சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிப்பதிலும், போதை பொருள் விற்பனையிலும், சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதிலும் மட்டும் தான் முதலிடத்தில் இருக்கிறது.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.