• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதை 5 முறை பெற்று அம்மா அரசு சாதனை – சட்டப்பேரவையில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. பெருமிதம்

April 8, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதை 5 முறை பெற்று அம்மா அரசு சாதனை – சட்டப்பேரவையில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. பெருமிதம்

by Namadhu Amma
April 8, 2022
in தற்போதைய செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

அம்மாவின் அரசு கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை ‘கிருஷி கர்மான்’ விருதினை பெற்று சாதனை படைத்துள்ளது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெருமிதத்துடன் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

2021- 2022-ம் ஆண்டு கொள்கை விளக்க குறிப்பில் பக்கம் 9-ல், பாரா 3-ல், குறிக்கோள் 6.5, இதில் 2020-ம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அது தவறு, 2030 என்று திருத்திக் கொள்ளுங்கள் என்று நான் கடந்த ஆண்டு கூறியிருந்தேன். இது தவறுதலாக நடந்துள்ளது என்று எண்ணினோம்.

இந்த ஆண்டு, 2022- 2023-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்க குறிப்பில், அதே 9-ம் பக்கத்தில், அதே குறிக்கோள் 6.5-ல், அதே 2020-ம் ஆண்டு என்று சென்ற ஆண்டு கட்டிக்காட்டிய அதே தவறு, இந்த ஆண்டும் 2030 என்று குறிப்பிடாமல்,2020-ம் ஆண்டிற்குள் நீர் ஆதாரம் தொடர்புடைய பல்வேறு சூழலியல் காரணிகளான மலைகள், காடுகள், சதுப்பு நிலங்கள்,

ஆறுகள், நீர்த்தாங்கிகள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றை பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல் என்கின்ற வருங்காலப்பணியை அல்லது நிகழ்கால பணியை 2020 என்று திரும்ப திரும்ப குறிப்பிடுவதன் மூலம் கடந்த காலம் என்பதை உணர்ந்தார்களா என்பது கேள்வியாக உள்ளது.

எனவே இந்த 2022-2023-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்க குறிப்பு இப்படி தான் இருக்கிறது என்று மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு நான் குறிப்பிட்டபோது சம்பந்தப்பட்டவர்கள் கவனித்தார்களா? கடந்த ஆண்டு நடந்த தவறு,

இந்த ஆண்டும் இடம் பெற்றதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை வேண்டுமென்று குறிக்கோள் 6-6-2020-ம்ஆண்டிற்குள் நீராதாரம் தொடர்புடைய பல்வேறு சூழலியல் காரணிகளான மலைகள், காடுகள், சதுப்பு நிலங்கள், ஆறுகள், நீரத்தாங்கிகள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றை பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல். 2020-ம் ஆண்டு என்பது முடிந்து போன காலம். 2020-ம் ஆண்டு முடிந்து போன ஒன்று.

எதற்காக நான் அதை சொல்ல வருகிறேன் என்றால், சென்ற ஆண்டும் நான் குறிப்பிட்டேன். அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, இந்த ஆண்டும் அதே தவறு ஏற்பட்டிருக்கிறது. தன்னிலை மாறினாலும் மீண்டும் தன்னிலைக்கு மீண்டு வரும் ஒன்று தான் நீர், தண்ணீர்,

தண்ணீர் நீலவான் தரும் நிறமில்லா அமிழ்தம்; பூமிக்குள் புதைந்திருக்கும் புதையல் தண்ணீர் தான் நிலத்தின் உயிர் அது இருந்தால் தலை நிமிர்ந்து வாழும் பயிர். தண்ணீர் இயற்கை தந்த வரம். தரணி செழிக்க அதுவே உரம். தாய் போல் தண்ணீரும் நமக்கு சாமி. தலைமுறை வாழ தண்ணீரை சேமி என்றார்கள்.

இதையெல்லாம் கண்ணுற்ற எங்கள் தாய் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், நல்லோர் அனைவரும் பெரிதும் பாராட்டிய ‘மழைநீர் சேகரிப்பு’ திட்டத்தை அமல்படுத்தினார். அதற்கு தீவிர செயல் வடிவம் தாருங்கள். மழை காலங்களில் ஓடி வரும் வெள்ளத்தை அணைக்கட்டி தடுக்கவும், உயர்ந்துவரும் கடல் அலையால், கடல்நீர் உட்புகுவதை கதவணை கட்டி தடுக்கவும்,

திட்டம் தந்து, நிதி தந்து, நல்லதொரு தொழில்நுட்பத்தோடு தனது
மதிநுட்பத்தை நடைமுறைப்படுத்தி காட்டியவர் எங்கள் தாய் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இதை மேலும் தொடருங்கள். நிகழ் காலத்தில், காவேரி- கோதாவரி இணைப்பும் சாத்தியமானது. அம்மா அவர்களின் அரசு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் தான்.

கிருஷ்ணா ஆற்று தண்ணீரை அன்றைக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மத்திய அரசோடும், கர்நாடகம் மராட்டிய அரசோடும், ஆந்திர அரசோடு பேசி எடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை இந்த அவையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இங்கே கொடுத்திருக்கிறார். எதற்காக நான் இதை சொல்ல வந்தேன் என்று கேட்டால்,

இது போன்றது தான் நிகழ்காலத்தில் காவேரி- கோதாவரி இணைப்பும் சாத்தியமானதே என்பதை சொல்வதற்காகவே நான் அதை கொண்டு வந்தேன்.

அம்மா அவர்களின் அரசு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை நாங்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து போர்க்கால நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

வறட்சியிலும் புரட்சி படைத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார். அணைகள், ஏரிகள், கால்வாய்கள், ஆறுகள், குளங்கள் வாய்க்கால்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக்கொள்ள ஆணையிட்டு அரசு நிதி இல்லாமல் நாடு முழுக்க நீர்நிலைகளை உருவாக்கி தந்த பெருமைக்குரியவர்கள் எங்கள் எடப்பாடியார், ஓ.பன்னீர்செல்வம், குடிமக்கள் வாழ, குடி மராமத்து திட்டம் பேருதவியான திட்டம். நல்லோர் வரவேற்ற, பாராட்டிய, வாழ்த்துக்குரிய திட்டம். இதைத்தொடர்ந்து நடைமுறைப்படுத்திடுங்கள். இதற்கு முற்று வைத்து விடாதீர்கள்.

விவசாயிகளே சங்கம் அமைத்து ஆறுகளில், வாய்க்கால்களில் வேலைகளை செய்து திருப்தி அடைந்தார்கள். எடப்பாடியார் அரசை மனதார பாராட்டினார்கள். இத்திட்டத்தை நீங்கள் தொடரவில்லை, தொடரப்போவதாகவும் தெரியவில்லை. விவசாய சங்கங்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்படியார்
அமல்படுத்திய இரண்டு வகை குடிமராமத்து பணிகளையும் நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்தி கேட்டு க்கொள்கிறேன்.

“தினகரன்” பத்திரிகையில் ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மக்களுக்கு பயன் தராத ரூ.1000 கோடியிலான 3 கதவணைகள் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டன. நிதித்துறை பரிந்துரைக்கு பின் நீர்வளத்துறை நடவடிக்கை என்றும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டம் கத்தார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்தின் இடையே ஒரு கதவணை அமைக்கும் திட்டம்.

அதற்கு மேல் நான் போகவில்லை.அதே மாதிரி, கரூர் மாவட்டம் மோகனூர் அருகே காவேரி ஆற்றின் குறுக்கே ரூ.700 கோடியில் கதவணை அமைக்கும் திட்டம், கடலூர் மாவட்டம் நல்லாம்புத்தூர் கிராமங்களுக்கு இடையே ரூ.300 கோடியில் கொள்ளிடம் வெளியிடப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள் அது உயர் நீதிமன்றமாக இருந்தாலும், உச்ச நீதிமன்றமாக இருந்தாலும் கடலுக்குள் சென்று வீணாகின்ற நீரை சேமியுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த அடிப்படையில் தான் கொள்ளிடம் ஆற்றிலிருந்து
கடலுக்கு போய் சேர்கின்ற உபரி நீரை.

வெள்ளக்காலத்தில் வருகின்ற நீரை தேக்கி வைக்க, நிலத்தடி நீரை சேமிக்க, பாசனத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கான திட்டங்கள் தான் அவைகள். இதில் அரசியல் எதுவும் இல்லை. ஆகவே இத்திட்டங்களை கைவிட்டீர்களா அல்லது தரப்போகிறீர்களா?

2021- 2022-ம் ஆண்டு மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பிலும், இந்த ஆண்டு கொள்கை விளக்க குறிப்பு புத்தகம் பக்கம் எண் 237, 18.2-ல் வண்டல் மண் இலவசமாக வழங்குதல் என குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகள் சொந்த நிலத்து மண்ணை, அடுத்து உள்ள தனது சொந்த நிலத்திற்கு டிராக்டரை பயன்படுத்தி, விவசாயிகள் தோட்டப் பயிர் பயிரிட முடியாமல் தவிக்கிறார்கள்.

அவர்கள் மீது வழக்கு மேல் வழக்கு, விவசாய பணிக்காக கடன் வாங்கி வாங்கிய டிராக்டர்கள் நீதிமன்ற நடவடிக்கையால் காவல் நிலையத்தில் கிடந்து மடிந்து சேதம் ஆகிறது. எனவே, வண்டல் மண் எப்போது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க போகிறீர்கள்.

இப்பிரச்சினையில் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சிக்காதீர்கள்.
விவசாயிகளின் டிராக்டர் டிரைவர், டிராக்டர் உரிமையாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற்று விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியை 14-8-2018 மற்றும் 10-8-2020 அன்றும் அடைந்தது. 142 அடியை 5-8-2018 அன்று அடைந்தது. காவேரி படுகையில் டெல்டா விவசாயிகளின் அச்சத்தை போக்க பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்காக சட்டத்தினை இயற்றி, பெருமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துள்ளது.

டெல்டா நீர்வள பகுதி விவசாய ஆதாரங்களை பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் புனரமைக்க ‘குடிமராமத்து திட்டம்’ என்ற சிறப்பான திட்டம் 13-3-2017 அன்று தொடங்கப்பட்டது. 1,418 கோடி ரூபாய் செலவில் எரிகள், வரத்து வாய்க்கால்கள் போன்ற நீர் நிலைகளில் 6,211 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று கிராம உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் இருக்கின்ற 28,623 நீர் நிலைகள் 422.60 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டன.

காவேரி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை புனரமைக்கும் பணிக்கான முதல் நிலை திட்ட அறிக்கை 10,711 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு, கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்க கோரி, மத்திய அரசின் ஜல் சக்தி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

காவேரி- வைகை குண்டாறு இணைப்பு திட்டம். ரூ.130.20 கோடியில் காவேரி டெல்டா பகுதிகளில் 694 தூரம் தூர் வாரும் பணிகள். தூர்வாரும்போது ஏரிகள் ஆழமாவதுடன், கிடைக்கும் வண்டல் மணி விவசாயிகளின் நிலத்திற்கு இயற்கை உரமாகவும் பயன்படுத்தப்பட்டது. மூன்றாண்டு கால திட்டமாக 934 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நதிகள், ஓடைகள் ஆகியவற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்றுள்ளன.

இதுபோன்று, ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக 730.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31,834 சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து திட்டமும், காவேரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளும் செம்மையாக மேற்கொள்ளப்பட்டதால் 8 முதல் 20 நாட்களுக்குள் கடை மடை வரை தண்ணீர் தங்குதடையின்றி சேர்ந்தது.

தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து திட்டமும், காவேரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளும் செம்மையாக மேற்கொள்ளப்பட்டதால் 8 முதல் 20 நாட்களுக்குள் கடை மடை வரை தண்ணீர் தங்குதடையின்றி சென்றடைந்தது. அம்மாவின் அரசு கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை ‘கிருஷி கர்மான்’ விருதினை பெற்று சாதனை படைத்துள்ளது.

வேதாரண்யம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியை உடன் தொடங்கிட வேண்டும். மானம் கொண்டான் ஆற்றில், வேதாரண்யம் வேம்பத்தேவன்காடு சாலையையும், ஆதனூர் சாலையையும் இணைக்கும் இடத்தில் பாலம் அமைக்க வேண்டும். வேதாரண்யம் நகராட்சி, தோப்புத்துறையையும், பெரியகுத்தகை கிராமத்தையும் இணைக்கும் வேதாரண்யம் கால்வாயில் பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டித்தர வேண்டும். ஓரடிமிப்புலம்- சென்னை வரை ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பேருந்தை மீண்டும் இயக்கிட வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.