அம்பத்தூர்
கழக பொதுச் செயலாளராக எடப்பாடியார் பொறுபேற்பது உறுதி என்றும், வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிப்பது என்றும் முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் நடைபெற்ற திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ம்தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான பா.பென்ஜமின் இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கி பேசினார்.
இக்கூட்டத்தில் கழகத்திற்கு ஒற்றை தலைமையை ஏற்று பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பு ஏற்க வேண்டும் என திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பாக ஒரு மனதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு கோயம்பேடு முதல் வானகரம் திருமண மண்டபம் வரை வரலாறு காணாத வகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட கழக, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


















