• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

10 ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

June 13, 2022
80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

August 7, 2026
80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

August 7, 2026
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

August 7, 2026
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

August 7, 2026
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

10 ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

by Namadhu Amma
June 13, 2022
in தற்போதைய செய்திகள்
0
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,

இன்றைக்கு காவல்துறை, ஏவல்துறையாக மாறி எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் பணியை செய்கிறது. 10 ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் சரி, உதயநிதி வந்தாலும் சரி அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.

கழக தலைமை கழகத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக 12 பேர் கொண்ட குழுவை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

இந்த குழு எந்தெந்த தீர்மானங்களை கொண்டு வர வேண்டும் என்பது தொடர்பாக விவாதித்தது. விவாதத்தின் தொடர்ச்சியாக ஒருங்கிணைப்பாளர்களின் ஒப்புதலை பெற்று அதன் பிறகு பொதுக்குழுவில் அதனை வைப்போம் என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி: அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளதே.

பதில்: நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் கழகம் என்ன செய்கிறது என்ற அசைவுகளைத்தான் பத்திரிகைகள் தொடர்ச்சியாக பார்த்து வருகிறது. எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. புரட்சித்தலைவர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி. அந்த எதிர்பார்ப்புகளைகழகம் நிறைவேற்றியது. ஒட்டுமொத்தமாக இந்த விடியாத அரசு பொறுப்பேற்று ஒரு வருட காலத்திலே மக்கள் விரோத போக்கு, ஆட்சியின் அவல நிலை,

இவை அனைத்தையும் தோலுரித்து காட்டும் வகையிலும், அதே நேரத்தில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியின் சாதனைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் இந்த பொதுக்குழு தீர்மானத்தில் இருக்கும். கட்சியில் இல்லாத ஒருவர் (சசிகலா) குறித்து ஏன் பேச வேண்டும் என்று இணை ஒருங்கிணைப்பாளரே சொல்லியுள்ளார். அவர்கள் கட்சியில் இல்லை. அவர்கள் குறித்து பேச வேண்டிய அவசியம் கிடையவே கிடையாது.

கேள்வி: நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் பேசியது தொடர்பாக அ.தி.மு.க எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே.

பதில்: இது குறித்த கருத்தை ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். நானும் கட்சியின் சார்பில் பேட்டி அளித்துள்ளேன்.

பொதுவாகவே மதங்கள் மதிக்கப்பட வேண்டும். எந்த மதமாக இருந்தாலும் அது மதிக்கப்பட வேண்டும். மதத்திற்குள் மூக்கை நுழைக்கக்கூடாது. யாராக இருந்தாலும் மதத்தில் மூக்கை நுழைத்து மலிவான அரசியல் செய்வது என்பது மனிதக் குலம் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். இதுபோன்ற பிற்போக்குதனமான கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கேள்வி: ஆன்லைன் ரம்மி தடை செய்வது தொடர்பாக தமிழக அரசு ஒரு குழு அமைத்துள்ளதே.

பதில்: அம்மாவின் ஆட்சியில் எடப்பாடியார் ஒரு சட்டம் கொண்டு வந்து அதனை முழுமையாக தடுத்தோம். சட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று தான் நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால் இந்த விடியா அரசில் ஆன்லைன் ரம்மி, போலியான லாட்டரி, கஞ்சா, போதைப்பொருட்கள்.

இவை அனைத்தும் சர்வ சாதாரணமாக நடமாடும் மாநிலம் தமிழகம் என்ற அடிப்படையிலே, ஆன் லைன் மூலம் 23பேர் தங்களுடைய இன்னுயிரை மாய்த்து கொண்ட நிலையிலே,ஏன் இந்த வழக்கை எதிர்த்து அப்பீல் போகவேண்டும்.சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வாங்குவதை வாங்கிக்கொண்டு. பெறுவதைப் பெற்றுக்கொள்ளும் வேலை தான் இது.

நாங்கள் அடிப்பது போல அடிப்போம். நீங்கள் அழுவது போல அழ வேண்டும். இதுதான் இதில் நடக்கிறது. இதற்கு குழு போடவேண்டிய அவசியமே இல்லை. இதனை உடனடியாக தடை செய்து முற்றிலும் ஒழிப்பதற்கு மாநில அரசே அதிகாரம் படைத்தது. இப்படி இருக்கும் போது ஏன் குழு போட்டு சுற்ற விடுகிறீர்கள். இதில் நீங்கள் ஆதாயம் கருதி இந்த வேலையை செய்துள்ளீர்கள்.

கேள்வி: தமிழகத்தில் பா.ஜ.க தொடர்ந்து போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று செய்து வருகிறது. நார்கள் தான் அதிகமாக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறோம் என்கிறார்கள். ஏன் அ.தி.மு.க அதிக போராட்டத்தை நடத்தவில்லை.

பதில்: ஒவ்வொரு கட்சியினரும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று செய்வார்கள். இது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் விலைவாசி உயர்வு போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லையா.

சொத்துவரி உயர்வுக்குப் போராட்டம் செய்யவில்லையா. தொழிற்சங்கங்கள் ஆங்கங்கே போராட்டம் செய்து வருகிறது. மின் வாரியத்தில் நடைபெற்ற அவல நிலையை கண்டித்து என் தலைமையில் ஒரு போராட்டம் நடந்தது.

நாங்கள் அதிக அளவு போராட்டம் நடத்தவில்லை என்ற மாயை பிரச்சாரம் நடத்தப்படுகிறது. அவர்கள் (பாஜக) கட்சியை வளர்ப்பதற்கு நாங்க தான் என்று பிரச்சாரம் செய்யலாம். ஆனால் எங்களுக்கு என்று ஒரு கடமை உள்ளது.

மக்கள் விரோத போக்கு, ஜனநாயக விரோத போக்கு, இந்த ஆட்சியின் அவல நிலை குறித்து மக்களிடையே தோலுரித்து காட்டுவதற்கு ஒரே ஆயுதம் எது என்றால் அது போராட்டம் தான். இதில் நாங்கள் ஆர்ப்பாட்டத்திற்கும், போராட்டத்திற்கும் நாங்கள் என்றும் பின்வாங்கியதில்லை.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும் போது அவ்வப்போது பம்மி விடுவார்கள். மக்கள் விரோத போக்கை இந்த அரசு கடைபிடிக்கும் போது வீதிக்கு வந்து போராட்டம் நடத்திய இயக்கம் கழகம் தான். கரூரில் போடாத சாலைக்கு 4.50 கோடி எடுத்து விட்டார்கள் என்று ஊழலை வெளிக்கொண்டு வந்தோம்.

பொங்கல் தொகுப்பில் இந்த அரசு ரூ.500 கோடி கொள்ளை அடித்துள்ளது என்று பட்டவர்த்தனமாக தெரிவித்தோம். வழக்கு போட்டோம். நாங்கள் ஊழலை தோலுரித்து காட்டவில்லையா? நாங்கள் போராட்டம் நடத்தவில்லையா? அவர்களுடைய கட்சியை அவர்கள் வளர்த்துக் கொள்ளட்டும்.

அது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் எங்களுடைய கடமையிலிருந்து நாங்கள் என்றும் தவறுவது கிடையாது.

கேள்வி: லாக்கப் மரணங்கள் தொடர்பாக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதே.

பதில்: லாக்கப் மரணம் என்பது இந்த ஆட்சியில் சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம். நிர்வாக திறமையுள்ள முதலமைச்சராக இருந்தால் காவல்துறையை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு சட்டம்-ஒழுங்கை பராமரித்து லாக்கப் மரணங்கள் இல்லாமல் பொதுமக்களுக்கு அமைதியை ஏற்படுத்தி தர முடியும். அவரை பொறுத்தவரையில் தினமும் தொலைக்காட்சியில் வரவேண்டும்.

கையில் ரிமோட்டை பிடிக்க வேண்டும். கத்திரி கோல் எடுத்துக்கொண்டு திரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றதே தவிர வேறு எந்த எண்ணமும் இருக்கின்றது அவருக்கு. இதன் காரணமாக காவல்துறை கட்டுக்குள் அடங்காமல் போய் விட்டது. காவல்துறை என்பது குதிரை. அதன் லகானை சரியாக பிடித்துக்கொண்டு சென்றால் தான் சரியான பாதையில் செல்லும். இதில் கட்டுப்பாடு இல்லை என்றால் தறிகெட்டு தான் ஓடும்.

அதன் அடிப்படையில் தான் இன்றைக்கு காவல்துறை, ஏவல்துறையாக மாறி எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் பணியை செய்கிறது. பொய் வழக்கு போடுகிறது.

எங்கள் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சரி, சிறையில் அடைத்தாலும் சரி, அழித்து ஒழிக்க வேண்டும் என்றாலும் சரி, 1972 ல் புரட்சித்தலைவரால் ஆரம்பித்த இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும்

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

August 7, 2026
80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

August 7, 2026
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.