• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
அரசுக்கு லாபம் ஈட்டுவதற்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனசை குறைக்கக்கூடாது

அரசுக்கு லாபம் ஈட்டுவதற்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனசை குறைக்கக்கூடாது

April 26, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, February 9, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

அரசுக்கு லாபம் ஈட்டுவதற்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனசை குறைக்கக்கூடாது

by Namadhu Amma
April 26, 2022
in தற்போதைய செய்திகள்
0
அரசுக்கு லாபம் ஈட்டுவதற்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனசை குறைக்கக்கூடாது
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வேண்டுகோள்

சென்னை

அரசுக்கு லாபம் ஈட்டுவதற்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனசை குறைக்கக்கூடாது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று வனம், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் குறித்த மானிய கோரிக்கை விவாதத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

மனித விலங்கு மோதலை தவிர்த்து உயிர் இழப்பை தடுப்பதற்கான பணிக்கு இன்றியமையாதவர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் தான். அவர்கள்தான் வனத்தின் கண்கள் என அழைக்கப் படுகிறார்கள் என்பதை வனத்தை பற்றி அறிந்தவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.

தற்போது திண்டுக்கல் கோட்டத்தை பொறுத்தவரை வேட்டை தடுப்பு காவலர்கள் 50 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 11 பேர் மட்டுமே உள்ளனர்.

அம்மாவின் அரசின் போது இருந்த எண்ணிக்கையை விட பாதிக்கு மேல் பணி ஓய்வு பணிமாற்றம் போன்ற காரணத்தினால் இந்த பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்ததால் தான் யானை தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அரசின் செலவினத்தில் மிகவும் அவசியமானது எது என்பதை நிதி ஒதுக்கும் அதிகாரிகளும் அரசும் உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டு கொள்வதோடு, வேட்டை தடுப்பு காவலர்களை உடனே நியமனம் செய்ய உங்களை வேண்டுகிறேன்.

மேலும் அம்மா அவர்களின் அரசு வேட்டை தடுப்பு காவலர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தினை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.6750 யிலிருந்து 10,000, அதன் பின் ரூ 10,000லிருந்து 12500 என உயர்த்தி அவர்களின் அத்தியாவசிய பணியினை அங்கீகரித்து வழங்கியது. தற்போது தடுப்பு காவலர்களின் தன்னலமற்ற

பணியினை மேலும் அங்கீகரிக்கும் முகமாக வேட்டை தடுப்பு காவலர்களின் தொகுதிப்பூதியத்தினை ரூ.12500 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி தந்து அவர்களின் இடர்படும் வாழ்க்கையிலிருந்து சற்றே இன்பமுறும் வாழ்க்கையாக மாற்றும்படி அரசை கேட்டுக் கொள்கிறேன்.

வன வளங்கள், வன வள ஆதாரங்கள் மற்றும் வன வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டிய வனத்துறையில் காலி பணியிடங்கள் இருந்து வருகின்றன. இதனால் வனத்துறையில் பணி சுணக்கம் நிலவி வருவதோடு இது வனத்துறைக்கே சவாலாக இருந்து வருகிறது என்பதை 22.4.22 அன்றைய இந்து பத்திரிக்கை கூட கட்டிக் காட்டி உள்ளது.

தற்போது நீங்கள் பத்து ஆண்டுகள் இருந்தீர்களே என்ன செய்தீர்கள் என எங்களை நோக்கி நீங்கள் உங்கள் கேள்வி கணைகளை தொடுக்கலாம். அதற்கும் நான் தயாராக தான் வந்துள்ளேன் என்பதற்கு அம்மா அவர்களின் அரசு பதவியில் இருந்தபோது நியமனம் செய்த பணியாளர்களின் விவரங்களை தருகிறேன்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 2016 முதல் 2021 வரை 5 ஆண்டுகளில் மட்டும 14 உதவி வன பாதுகாவலர்கள் மற்றும் 154 வன பயிற்றுநர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 300 வனவர்கள், 726 வன காப்பாளர்கள் 61 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வன காப்பாளர்கள், 564 வன காவலர்கள் 196 மிகை பணியிட தோட்ட காவலர்கள்/ வேட்டை தடுப்பு மிகை பணியிட வனக்காவலர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வனத்துறை வரலாற்றில் முதன் முறையாக 190 பெண் வனக்காப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிலும் முதன் முதலாக மூன்றாம் பாலினத்தவர்களும் ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டதோடு
கேள்வித்தாள்கள் ஆன்லைன் மூலமாக question paper tool software மூலம் தேர்வு நடைபெறுவதற்கு முன்னர் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் தான் கேள்விதாளே நேரடியாக ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு எந்தவித தவறுகளுக்கும் இடம் அளிக்காது தேர்வு நடத்தப்பட்டது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஏப்ரல் 20.4.2022 அன்று நம் பாரதப் பிரதமர் மோடி உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சிமாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில் விரைவில் பாரம்பரிய சிகிச்சை பெற வெளிநாட்டவர்களுக்கு ஆயுஷ் விசா வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

எனவே இனி வரும் காலங்களில்நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் மருத்துவ குணம் கொண்ட செடிகளின் உள்நாட்டு தேவையும் ஏற்றுமதிக்கான வாய்ப்பும் அதிகரிக்கும் சூழல் நிலவுவதால், வனத்துறையின் மூலம் அம்மா அவர்களின் ஆட்சியின் போது மருத்துவத் தன்மை வாய்ந்த தாவர இனங்களை கொண்டு பெரும் மருத்துவ தாவரப் பூங்கா அமைக்கும் திட்டம் ரூ.26.64 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது எனவே, மருத்துவ தாவரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை மீண்டும் மருத்துவ தாவரங்களின் சாகுபடிக்கு மானியம் மற்றும் ஏனைய சலுகைகளை கொடுக்க வேண்டும் என இந்த மாமன்றத்தின் மூலம் இந்த அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 2021 மானிய கோரிக்கையின் வெளியிட்ட அறிவிப்பில் 12-வது அறிப்பாக அரசுக்கு சொந்தமான வன நிறுவனங்களில் லாபம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் ஆராயப்படும் என்று அறிவித்து இருந்தீர்கள்.

இதில் தாங்கள் லாபம் ஈட்டுவதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு நாங்கள் பல்வேறு நிதி நெருக்கடியிலும் வழங்கிய 20 சதவீத போனசை 10 சதவீமாக குறைத்து லாபம் ஈட்ட வழி தேடி உள்ளீர்கள் என்பதனை நினைக்கும் போது சற்றே வருத்தமாக உள்ளது.

எடப்பாடியார் இருந்தபோது வனத்துறை சார்ந்த நிறுவனங்களில் லாபம் ஈட்ட வேண்டுமென்றால், இயந்திரங்கள் நவீனமயமாக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து ரூ 16 கோடியை டான்டீ நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்தார். அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கொண்டுதான், குன்னூர் டான்டீ நிறுவனத்தில் டீத்துாளை உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரங்கள் எல்லாம் இன்றைய தேதியிலும் நவீனமயமாகி கொண்டிருக்கின்றன வனத்துறை அமைச்கரும் குன்னூரை சேர்ந்தவர் என்பதால் நன்கு அறிவார்.

ஆக நாங்கள் ஆட்சியில் இருந்தபோது லாபம் ஈட்ட இயந்திரங்களை நவீனமயமாக்கினோம். நீங்களோ லாபம் ஈட்ட தொழிலாளர்களின் போனசை 20 சதத்திலிருந்து 10 சதவீதமாக
குறைத்து லாபம் காட்ட முயலுகிறீர்கள்.

மேலும் தொழிலாளர்களின் போனசில் கை வைத்து அவர்களின் வாழ்வாதாரத்திலும் கை வைப்பதுதான் லாபம் ஈட்டுவதற்கான வழியா? எனவே நான் தொழிலாளர் நலனை அக்கறையுடன் கவனித்து அவர்களின் தகுதிக்கேற ஊதியத்துடன் போனசையும் வழங்கிய பிறகு, லாபம் ஈட்டுவதற்கான வழியினை கண்டறிந்தால் அது தான். லாபம் ஈட்டுவதற்கான உண்மையான முறையாக இருக்கும் என இந்த நேரத்தில் உங்களுக்கு நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.