• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க-கழக அவைத்தலைவர் அ.தமிழ் மகன் உசேன் பேட்டி

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க-கழக அவைத்தலைவர் அ.தமிழ் மகன் உசேன் பேட்டி

November 9, 2022
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

August 5, 2026
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு

இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு

August 5, 2026
1000 ஏசி மின்சார பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு – பட்ஜெட்டில் அறிவிப்பு

1000 ஏசி மின்சார பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
அனைத்து ரேசன் கடைகளிலும் 8,9 தேதிகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

அனைத்து ரேசன் கடைகளிலும் 8,9 தேதிகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, August 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க-கழக அவைத்தலைவர் அ.தமிழ் மகன் உசேன் பேட்டி

by Namadhu Amma
November 9, 2022
in தற்போதைய செய்திகள்
0
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க-கழக அவைத்தலைவர் அ.தமிழ் மகன் உசேன் பேட்டி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை

தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் தலைமையிலான கழக ஆட்சி அமைந்திட கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் ஹஜ்ரத் நூர்சா அவுலியா தர்காவில் கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குனியமுத்தூர், சுண்டக்காமுத்தூர், தொண்டாமுத்தூர், செல்வபுரம் பகுதி கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஹஜ்ரத் நூர்ஷா அவுலியா தர்கா செயலாளரும், பகுதி கழக தலைவருமான எஸ்.எம்.உசேன், பகுதி கழக செயலாளர்கள் எம்.மதனகோபால், வி.குலசேகரன், பிகே.சீனிவாசன், லாலி ரோடு விஜய், எம்.பெருமாள்சாமி, ஏ.ரபீக், பகுதி துணை செயலாளர் எஸ்.அருணகிரிநாதர், பகுதி பொருளாளர் கேகே.சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத்தொடர்ந்து கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி கே.பழனிசாமி அ.தி.மு.க. நிரந்தர பொதுசெயலாளராக வேண்டியும், வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்பும் நிலையில், மீண்டும் முதல்வராக எடப்பாடியார் வர வேண்டும் என 75 மாவட்டங்களில் 70 தர்காக்களிலும், இந்திய துணைக்கண்டத்தில் இடம்பெற்றுள்ள 13 மாநிலங்களில் உள்ள தர்காக்களிலும் சிறப்பு பிரார்த்தனை எனும் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளேன்.

39வது மாவட்டமாக கோவை மாவட்டம் வந்துள்ளேன். எடப்பாடியார் அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டி கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெறுகின்ற இந்த சிறப்பு பிரார்த்தனையில் மிக அதிகமான கழக தொண்டர்கள் சமய வேறுபாடின்றி கலந்து கொண்டுள்ளனர்.

மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடியார் பதவியேற்பார். தமிழகத்தில் அ.தி.மு.க துவக்கப்பட்டபோது புரட்சித்தலைவரால் அறிவிக்கப்பட்ட முதல் மாவட்ட அமைப்பாளரே நான் தான். ஏறத்தாழ கடந்த 50 ஆண்டுகளாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை அள்ளித் தந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க மட்டுமே.

ஒருமுறை பள்ளிவாசல்களிலும் மதராஸாக்களிலும் இமாம்களாக பணியாற்றுகின்ற எங்களுக்கு எந்த ஊதியமும் கிடையாது என முஸ்லிம் பெரியவர்கள் புரட்சித்தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். புரட்சித்தலைவர் இஸ்லாம் பெரியோர்களுக்கு உதவும் வகையில் ஒரு மணி நேரத்தில் உருவாக்கிய அற்புத திட்டம் தான உலமாக்களுக்கு ஒய்வூதியம் எனும் திட்டம். புரட்சித்தலைவர் வழியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களும், எடப்பாடியார் அவர்களும் ஓய்வூதியத்தை அதிகரித்து வழங்கினார்கள்.

ஒரு சில கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலர்கள், இஸ்லாமியர்களுக்காக வாழ்கிறோம் என்று கூறுவார்கள்.
ஆனால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. ரமலான் நோன்பு மாதத்தில் நோன்பு கட்சி தயாரிக்க 5432 மெட்ரிக் டன் அரிசி வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதை மேலும் அதிகரித்து தந்தவர் எடப்பாடியார்.

அதுமட்டுமின்றி ஹஜ் யாத்திரை செல்ல மானியத்தொகை முப்பதாயிரம் வழங்கியதும் அதிமுக மட்டுமே.வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்த இஸ்லாமிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் கடன் உதவி வழங்கியதும் அதிமுக ஆட்சி மட்டுமே. கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கழக ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்களை பெற்று தந்தவர் எஸ்.பி.வேலுமணி.

ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் கோவைக்கு இதுவரை ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. எங்கு பார்த்தாலும் அடக்குமுறை,வன்முறை, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட சட்டத்திற்கு விரோதமான செயல்களே நடைபெறுகிறது. இங்குள்ள சாலைகளை பார்த்தால் குளங்களை போல காட்சி அளிக்கிறது.

இன்றைய திமுக ஆட்சியை எதிர்த்து யாராவது போராட முடியுமா? கழக ஆட்சி களத்தில் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களுக்கு ஒரு குறை என்றால் உடனே நிறைவேற்றி தந்தார். ஏன் இதை சொல்கிறேன் என்றால் அதிமுக இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கேடயம். எந்த அரசியல் கட்சியும் ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு விருந்தை நடத்தாத சூழ்நிலையில் கூட தம் சொந்த செலவில் 21 ஆண்டுகள் இப்தார் நோன்பு எனும் நிகழ்ச்சியை நடத்தியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இந்த இயக்கத்தில் என்னைப்போன்ற இஸ்லாமியர் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் வகையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று செயல்படுகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றதேர்தலிலும் அ.தி.மு.க வெல்ல வேண்டும். எடப்பாடியார் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும் என்று இன்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டோம்.

இவ்வாறு கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் தோப்பு அசோகன், மாவட்ட கழக துணை செயலாளர் என்.கே.செல்வதுரை, பீளமேடு துரைசாமி, மதுக்கரை நகர கழக செயலாளர் மதுக்கரை சண்முகராஜா, ஒன்றிய செயலாளர் ஜி.குமரவேல், இகே.பழனிசாமி, கேவி.முனுசாமி, பொதுக்குழு உறுப்பினர் சுசிலா மாணிக்கராஜ்,
நகர கழக துணை செயலாளர் ஜோசப், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் டி.லட்சுமிகாந்தன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் குறிச்சி மரியா,

சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கே.செபி செபாஸ்டின், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் கே.சிவகுமார், வக்கீல் மாணிக்கராஜ், பாசறை நிஷ்கலன், பகுதி தலைவர் கே.ஆர்.செல்வராஜ், பேரூராட்சி கழக செயலாளர் சுந்தர்ராஜ், வார்டு கழக செயலாளர்கள் சித்திரை செல்வராஜ், ஏ.செல்லப்பன், ஜூனியர் ராஜா, கே.பி.பாஸ்கரன், எம்.ஜெகதீசன், விவேகானந்தன், ஜாஸ் ஜெகதீஷ், மணல் நாராயணன், எஸ்.சி.செல்வராஜ், எஸ்டி.கதிரேசன், ஜனார்த்தனன், பிரகாஷ், வேணுகோபால், கரும்புக்கடை முஜி, தங்கம் ரகூப்,கேபிள் பஷீர், குஞ்சாலி, கேபிள் சரவணன், விஸ்வநாதன், பத்மநாபன், டி.கே.கண்ணையன், தர்மராஜ், மாணிக்கம், பாலகிருஷ்ணன் மற்றும் மதுரை விடி.மணி, சென்னை ராஜேஷ், வெங்கடேஷ், ஜலீல் பாய், ஜின்னா பாய், ஹஜ்ரத் நூர்ஷா அவுலியா தர்கா தலைவர் சையத் அஜ்முல் உசேன்,

முத்துவல்லி ஷாநவாஸ், லியாகத் அலிகான், பீர் முகமது நூர் முகமது, பாபு, முஸ்தபா, ஆட்டோ பாபு, பஷீர், பகுதி கழக நிர்வாகிகள் சிந்து அகல்யா, செல்வி, கலாவதி, சோமசுந்தரம், எஸ்.வி.தேவராஜ், மாபா.ஆனந்தன், அப்துல் ரகுமான், குமரவேல், இளங்கோ, கேசி.ஆ.செல்வகுமார், வடிவேல், சதீஷ்குமார்,தேவராஜ், டி.சுரேஷ்குமார், அர்ஜூன்,

பெரோஸ், சாய் ஷியாம், கே.கோபிநாத், சம்பத்குமார், பாண்டியராஜன், சையது பஷீர், கரிகாலன், ராதாகிருஷ்ணன், ரத்னவேல், மகளிர் அணி செயலாளர் கிளி என்கிற ஷகிலா பேகம், நிர்வாகிகள் பூங்கொடி, மணி,நிஷா, ரெஜினா பேகம், பாக்யா, மகேஸ்வரி, பூங்கொடி, தனலட்சுமி, சுகந்தி, ராஜேஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.