• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
விடியா அரசை கண்டித்து அடுத்தக்கட்ட போராட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் திட்டவட்டம்

விடியா அரசை கண்டித்து அடுத்தக்கட்ட போராட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் திட்டவட்டம்

August 29, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

விடியா அரசை கண்டித்து அடுத்தக்கட்ட போராட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் திட்டவட்டம்

by Namadhu Amma
August 29, 2022
in தற்போதைய செய்திகள்
0
விடியா அரசை கண்டித்து அடுத்தக்கட்ட போராட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் திட்டவட்டம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

விடியா தி.மு.க. அரசை கண்டித்து அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிப்போம் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் திட்டவட்டமாக கூறினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்புடையதாக இல்லாததை கண்டித்து, அண்ணா தொழிற்சங்கப்பேரவை சார்பாக சென்னை, பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் பேசியதாவது;-

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடங்கும் போது, அப்போதைய எதிர்க்கட்சி மற்றும் ஆதரவு சங்கங்கள் 25 சதவீத ஊதிய உயர்வு கோரினர். நிதி நெருக்கடி காரணமாக 10 முதல் 12 சதவீதம் வரை தருவதாக அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை அப்போது எதிர்க்கட்சி மற்றும் ஆதரவு சங்கத்தினர் புறக்கணித்தனர். தற்போது விடியா அரசு 5 சதவீத ஊதிய உயர்வையே அளித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்கியதிலும் 35 மாதங்களுக்கு பணப்பலன்களை வழங்கவில்லை.

போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த காலம் 3 ஆண்டுகள் இருந்ததை 4 ஆண்டுகளாக அதிகரித்ததை எதிர்ப்பு தெரிவித்து பேசியதற்கு, மற்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஊதியம் முறைப்படுத்துவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் மற்ற துறைகள் போல, போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று அண்ணா தொழிற்சங்கப் பேரவை வலியுறுத்தியது. மற்றும்

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள டிஏ மற்றும் பணப்பலன்களை உடனே வழங்கிடவும், அண்ணா தொழிற்சங்கப்பேரவை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளாததற்கும் அண்ணா தொழிற்சங்க பேரவை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தது.

போக்குவரத்து ஊழியர்களின் நலனை முதல்வர் கவனத்தில் கொள்ளாதது வருந்ததக்கது, கண்டிக்கத்தக்கது. எங்களுடன் சில சங்கங்கள் பேசி வருகின்றன. கூட்டு குழுவாக இணைந்து அடுத்தக்கட்ட ஆர்ப்பாட்டத்தை அறிவிப்போம்.

விடியா அரசின் தொழிலாளர்களின் விரோத போக்கை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து மண்டலங்களிலும் நடைபெற உள்ளது. சேலம், திருப்பூரில் 29-ந்தேதியும், ஈரோடு, கோவை, நீலகிரியில் 30-ந்தேதியும், விருதுநகர், திருநெல்வேலியில் 2.9.2022 அன்றும், நாகர்கோவிலில் 3.9.2022 அன்றும் நடைபெற உள்ளது.

இவ்வாறு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.