• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தி.மு.க.வினர் வாயால் வடை சுடுவார்கள்-முன்னாள் அமைச்சர் செ.செம்மலை கடும் தாக்கு

தி.மு.க.வினர் வாயால் வடை சுடுவார்கள்-முன்னாள் அமைச்சர் செ.செம்மலை கடும் தாக்கு

October 31, 2022
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

August 5, 2026
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு

இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு

August 5, 2026
1000 ஏசி மின்சார பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு – பட்ஜெட்டில் அறிவிப்பு

1000 ஏசி மின்சார பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
அனைத்து ரேசன் கடைகளிலும் 8,9 தேதிகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

அனைத்து ரேசன் கடைகளிலும் 8,9 தேதிகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, August 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தி.மு.க.வினர் வாயால் வடை சுடுவார்கள்-முன்னாள் அமைச்சர் செ.செம்மலை கடும் தாக்கு

by Namadhu Amma
October 31, 2022
in தற்போதைய செய்திகள்
0
தி.மு.க.வினர் வாயால் வடை சுடுவார்கள்-முன்னாள் அமைச்சர் செ.செம்மலை கடும் தாக்கு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தருமபுரி

தி.மு.க.வினர் வாயால் வடை சுடுவார்கள். தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் யாருக்கும் நிர்வாக திறமைகள் இல்லை என்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை கூறி உள்ளார்.

தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் கழக பொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தருமபுரி குமாரசாமி பேட்டை வாரியார் திடலில் கழக அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

கழக அமைப்பு செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சிங்காரம், கழக விவசாய பிரிவு தலைவர், மாவட்ட பால் வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வே.சம்பத்குமார், மாவட்ட கழக அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட கழக துணை செயலாளர்கள் செண்பகம் சந்தோஷம், ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் நல்லதம்பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர கழக செயலாளர் பூக்கடை ரவி வரவேற்புரையாற்றினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை, முன்னாள் எம்.பி. எஸ்.முத்துமணி, புதூர் மணி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

இதில் முன்னாள் அமைச்சர் செ.செம்மலை பேசியதாவது:-

தி.மு.க.வினர் வாயால் வடை சுடுவார்கள். தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் யாருக்கும் நிர்வாக திறமைகள் இல்லை. எதற்கெடுத்தாலும் குழு அமைக்கிறது திமுக அரசு. கழக அரசில் இந்தியாவில் உயர்கல்வித்துறை முதலிடம் பெற்றது. நீட் பிரச்சினையில் மக்களை, மாணவர்களை திமுக ஏமாற்றியது. நீட் என்பது மத்திய மாநில அரசுகள் கையில் இல்லை.

உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதின் அடிப்படையில் நீட்டுக்கு விதிவிலக்கு கொடுக்க முடியாது. ஏனென்றால் என்ன நோக்கத்திற்காக இந்த நீட் கொண்டு வரபட்டதோ அந்த நோக்கம் சரியான நோக்கம் அது சரியான நோக்கமாக இருக்கின்ற காரணத்தால் இந்த நீட் விதிவிலக்கு யாருக்கும் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. யார் நினைத்தாலும் நீட் விதிவிலக்கு செய்ய முடியாது. இதைபற்றி சிந்திக்க நிர்வாக திறமை ஸ்டாலினுக்கு இல்லை.

ஆனால் எடப்பாடியார் என்ன செய்தார் தெரியுமா? 7.5 சதவீத இடஒதுக்கீடு தந்தார். அதன் மூலம் அரசு பள்ளிகளில் கிராமத்தில் படித்த 595 பேர் இன்று ஆண்டு தோறும் மருத்துவர்களாகிருக்கின்றனர். இது தான் சாதனை இது தான் ஒரு ஆட்சியாளரின் நிர்வாக திறமையை எடுத்து காட்டுவதாக அமைகின்றது. ஒரு ஆட்சி என்றால் ஒரு சிக்கலும் தீர்வு ஏற்படுத்த வேண்டும். குழு அமைத்து ஒரு பிரயோஜனம் இல்லை. எடப்பாடியார் கூறியது போல இது குழு அரசாங்கம். இது நியாயம் இல்லை.

அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் காவல்துறையினர் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் இப்போது திமுக ஆட்சியில் ஒரே டார்ச்சர். கழக தொண்டர்கள் நிர்வாகிகள் மனதை தளரவிட வேண்டாம். அமைதியாக இருங்கள். மக்கள் இன்று வெறுத்து போய் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதாவது சூழ்நிலை நமக்கு சாதகமாக உள்ளது. நாம் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் செய்ய வேண்டியது கடமையே கண்ணாக இருக்க வேண்டும். அதுதான் நமக்கு மிக மிக முக்கியம்.

அடிப்படை அறிவு இல்லாமல் தி.மு.க.வினர் பேசுகின்றனர். தலைக்கு மேல் கத்தி இருப்பதை செந்தில் பாலாஜி போன்றவர்கள் மறந்து விடக்கூடாது. அதிமுக மீது மக்களுக்கு ஒரு அவ நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் முன்னாள் அமைச்சர்கள் மீது ஒரு நம்பிக்கை இல்லாத நிலைமையை ஏற்படுத்த வேண்டும். ஆனால் திமுக மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் தெரிந்து கொண்டார்கள். யார் நல்லவர்கள், கெட்டவர்கள். குழப்பம் தீர்ந்து விட்டது.

இனி நீங்கள் மக்களை அனுக வேண்டும். கழக ஆட்சியில் செய்த சாதனைகள் எடுத்து சொல்லவும். 11 மருத்துவக்கல்லூரிகள் ஒரே ஆண்டில் வாங்கப்பட்டது கழக ஆட்சியில். வாய்ப்புகளை உருவாக்கி தருவது தான் அரசாங்கத்தின் கடமை. அந்த கடமையை சரியாக செய்ய வேண்டும். ஆனால் திமுகவினர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. திராவிட மாடல் தத்துவம். மக்கள் எப்படியோ பிழைத்து கொள்ளுங்கள். இந்த ஆட்சி உங்களை காப்பாற்றாது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

மக்கள் நல அரசாக திமுக நிச்சயமாக இல்லை. மக்கள் விரோத அரசாகத்தான் இது நடந்து கொண்டிருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கும் விழும் அடி, அந்த கட்சி சட்டமன்ற தேர்தலில் ஓட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் எச்சரிக்கையாக இருந்து தேர்தல் மூலமாக இந்த ஆட்சியாளர்களுக்கு நமது எதிர்ப்பை தெரிவித்து நாடாளுமன்ற வெற்றி மூலமாக சட்டமன்ற தேர்தலில் கழக ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைகிற அந்த ஒரு நல்ல காரியத்தை நீங்கள் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செம்மலை பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.