• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை

May 6, 2022
80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

August 7, 2026
80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

August 7, 2026
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

August 7, 2026
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

August 7, 2026
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை

by Namadhu Amma
May 6, 2022
in தற்போதைய செய்திகள்
0
தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திருப்பூர்

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் உடுமலை தாஜ் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துபாய் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகர கழக செயலாளர் ஏ.ஹக்கீம் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான செ.தாமோதரன் எம்.எல்.ஏ., தலைமைக்கழக பேச்சாளர் தென்றல் விஜய் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

உழைக்கும் வர்க்கத்தின் உன்னதம் அறிந்தவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் அம்மா ஆகியோர் தொழிலாளர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள்.

யார் என்ன வேலை செய்தாலும் அவர்கள் செய்யும் தொழிலின் தரத்தை உயர்த்தும் விதமாகத்தான் புரட்சித்தலைவர் தாம் நடித்துள்ள படிங்களில் விமர்சித்து காட்டுவார்கள். அதன்பிறகு தான் அந்தந்த தொழில் செய்வோரும் அதன் மேன்மையை அறிந்து கொண்டு நடந்தார்கள்.

விவசாயிகளின் மேன்மையை பறைசாற்ற விவசாயி, இரும்பு பட்டறை தொழிலாளர்களை ஊக்குவிக்க தனிபிறவி, ரிக்‌ஷா ஓட்டுபவர்களுக்காக ரிக்‌ஷாக்காரன் போன்ற படங்களில் நடித்து அத்தொழிலின் மேன்மையை உணர்த்தினார்கள்.

ரிக்‌ஷாகாரன் படத்தில் நடித்த போதுதான் ரிக்‌ஷா ஓட்டுபவர்களின் நிலை அறிந்து அவர்களின் மீது கொண்ட பற்றால் மழை காலங்களில் மழையில் நனைந்தபடியே ரிக்சாவை இழுத்து செல்லும் அவல நிலையை நீக்க ரெயின் கோட் வழங்கி தொழிலாளர்களின் துன்பத்தை போக்கினார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவர் பாணியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தொழிலாளர்களின் மீது சிறிதளவும் பற்று குறையாமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் வெளிப்பாடு தான் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல வாரியங்கள் அமைக்கப்பட்டது.

விவசாயி தான் நாட்டின் ஆணிவேர் என்பதை அறிந்திருந்த புரட்சித்தலைவி அம்மா விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட வழி வகை செய்தார்.

விவசாயிகள் வயதாகி நலிவடையும் பொழுது அவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் வரை இலவச மருத்துவ செலவு மேற்கொள்ள வழிவகை செய்தார். கருவறை முதல் கல்லறை வரை எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து தமிழக மக்களின் வாழ்க்கை உயர பாடுபட்டார்.

கழக ஆட்சியில் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு மகத்தான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் வழியில் கழக ஒருங்கிணைப்பாளர்களும் சிறப்பாக அத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை. தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழ்நாட்டு மக்களுக்கு 75 சதவீத வேலை உத்தரவாதம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் இன்று வரை செயல்படுத்தவில்லை.

ஏழை, எளியோரின் கட்சி கழகம். இதயதெய்வம் அம்மா அவர்கள் கழகம் என்ற பேரியக்கத்தை கட்டி காத்து 18 லட்சம் தொண்டர்கள் இருந்த இயக்கத்தை, ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்.

மூன்றாவது பெரிய தேசிய கட்சியாக உருவாக்கிய பெருமை அம்மா அவர்களை சாரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அவருடைய வாரிசாக அம்மா அவர்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் 30 ஆண்டு காலம் கழக ஆட்சி நடைபெற்றது. 19 ஆண்டு காலம் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. கழக ஆட்சியில் இஸ்லாமிய மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யப்பட்டது. ரமலான் பண்டிகை நேரத்தில் இலவசமாக நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு பல ஆயிரம் டன் அரிசி வழங்கப்பட்டது.

இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள நிதிஉதவி, உலமாக்களுக்கு பென்ஷன் திட்டம், நாகூர் தர்காவிற்கு சந்தனக்கட்டை ஆகியவை வழங்கப்பட்டது. 30 ஆண்டு கால கழக ஆட்சியில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு சிறு தீங்கு கூட ஏற்பட அனுமதிக்கவில்லை. சிறுபான்மை மக்களுக்கு என்றுமே கழகம் பாதுகாப்பாக விளங்கும் என்பதை இந்நாளில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

August 7, 2026
80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

August 7, 2026
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.