• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
ஜிஎஸ்டி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததை வெளியிட தயாரா?விடியா அரசின் நிதியமைச்சருக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்

ஜிஎஸ்டி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததை வெளியிட தயாரா?விடியா அரசின் நிதியமைச்சருக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்

July 21, 2022
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

August 7, 2026
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

August 7, 2026
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

ஜிஎஸ்டி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததை வெளியிட தயாரா?விடியா அரசின் நிதியமைச்சருக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்

by Namadhu Amma
July 21, 2022
in தற்போதைய செய்திகள்
0
ஜிஎஸ்டி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததை வெளியிட தயாரா?விடியா அரசின் நிதியமைச்சருக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,

கார்பரேட் நிறுவனத்திலிருந்து வந்தவருக்கு மக்கள் நலன் பற்றி என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்-குமார், ஜிஎஸ்டி கூட்டத்தில் வரி தொடர்பாக இவர் எதிர்ப்பு தெரிவித்ததை வெளியிட தயாரா என்று விடியா தி.மு.க அரசின் நிதியமைச்சருக்கு சவால் விடுத்து உள்ளார்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி :அரிசி உள்ளிட்ட 40 அத்தியாவசிய பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளதே.

பதில் : கழகத்தின் அரசு, அம்மாவின் அரசு எடப்பாடியார் முதல்வராக இருக்கும் போது அவரின் ஆலோசனைகளை எல்லாம் பெற்று ஜிஎஸ்டி உறுப்பினராக கிட்டதட்ட 40 கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். நான் கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது எல்லாம் இவை அனைத்தும் விக்கிரமராஜாவுக்கும் தெரியும். இப்போது அவர் மகன் தி.மு.க.வில் உள்ளதால் அவர் பேசுவாரா என்று தெரியவில்லை.

அவர் மனசாட்சிக்கு தெரியும். ஒவ்வொரு கூட்டம் நடந்த பின்பும் அவர் என்னை பாராட்டி பேசியிருப்பார். அவர்களை எல்லாம் நான் அழைத்து பேசுவேன். அனைத்து தரப்பினரின் பிரச்சிசனை குறித்து கேட்பேன். எல்லோரின் கருத்தை பெற்று துறையின் ஒப்புதல் பெற்று ஒட்டுமொத்தமாக மக்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வகையிலே அங்கு குரல் கொடுத்தோம்.

பொதுவாக அரிசி, உப்பு, புளி, மிளகாய், தயிர், மோர் இப்படி பல்வகை பொருட்களின் வரியை 12 சதவீதத்திலிருந்து ஜீரோவுக்கு கொண்டு வந்தோம். கோவை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கு வெட் கிரைண்டர்கள் உற்பத்தியாளர்களுக்காக அதனை 5 சதவீதமாக போராடி குறைத்தோம்.

அது மறுபடியும் தற்போது 18 சதவீதமாக போய் விட்டது. நிதி அமைச்சர் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடியவராகத்தான் அங்கு இருக்க வேண்டும். ஆட்சிக்கு வருமானம் வந்தால் போதும் என்று இருந்தால் எப்படி மக்கள் நலன் காக்கும் அரசாக இருக்க முடியும்.

எங்களை பொறுத்தவரையில் மக்கள் நலன் காக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் பல பொருட்களுக்கு வரியைக் குறைத்தோம். உதாரணத்திற்கு ஒட்டலுக்கு 18 சதவீதத்திலிருந்து 28 சதவீதம் வரை வரி போட்டார்கள். இதனை 5 சதவீதமாகக் குறைத்தோம். சினிமா துறையினர் வந்து கோரிக்கை வைத்தார்கள். உடனே 100 ரூபாய்க்கு கீழ்,100 ரூபாய்க்கு மேல் என்று மாற்றி அந்த தொழிலையும் காப்பாற்றினோம்.

நாங்கள் எவ்வளவு செய்தோம் என்று வரிசைப்படுத்த முடியும். ஜிஎஸ்டி கவுன்சில் என்பது நமது மாநிலத்தின் உரிமைக்கு குரல் கொடுக்கின்ற ஒரு இடம். அதில் நீங்கள் என்ன குரல் கொடுத்தீர்கள். நான் பேசிய கூட்டங்களின் கருத்துக்கள் இன்றைக்கும் மத்திய அரசிடம் உள்ளது.

இவர் பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலன் கருதி எத்தனை வகையான பொருட்களுக்கு வரி குறைக்க வலியுறுத்தியுள்ளார் என்பதை பாருங்கள். எதையும் குறைக்கவில்லை. அங்கே அனைத்திற்கும் கையை தூக்கிவிட்டு வந்து இங்கே வந்து இரட்டை வேடம் போடுவது போல பாலுக்கும் தோழன், பூனைக்கும் காவலன், அதற்கு பிறகு பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கதையாகத்தான் இந்த விடியா அரசு செய்து வருகிறது.

கேள்வி : கூட்டணியில் உள்ளவர்கள் அழுத்தம் தரவேண்டும் என்று கேட்கிறார்களே

பதில் : நான்கு வருடம் கவுன்சில் உறுப்பினராக இருந்தேன். அப்போது அனைத்து பொருட்களின் வரியை குறைத்தோம். இவை அனைத்தையும் எங்களால் பட்டியல் போட முடியும். ஆனால் இதனை செய்யாமல் ஒரு மாநில அரசு இருக்கிறது. இதற்கு ஒரு நிதியமைச்சர். ஒ

ரு கவுன்சில் மெம்பர். ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநிலத்தின் நலனுக்காக வரி குறைப்புக்காக என்ன குரல் கொடுத்தீர்கள். இதனை மக்கள் மன்றத்தில் பொதுப்படையாக வெளியிட தயாரா. நாங்கள் பேசியது அனைத்தும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் வாங்கி விடலாம்.

அவர் அரிசிக்கு வரி குறைப்பு குறித்து பேசியுள்ளாரா, மற்ற பொருட்களின் வரி குறைப்பு குறித்து பேசியுள்ளாரா, அவரை பொறுத்தவரையில் வரி வருவாயை கூட்ட வேண்டும். அதுதான் அவருடைய ஒரே எண்ணம். ஏன் என்றால் அவர் கார்பரேட் நிறுவனத்திலிருந்து வந்தவர். எப்படி மக்களின் நலன் குறித்து அவருக்கு தெரியும்.

அவருக்கு மக்கள் நலன் தெரியாது. இப்போதும் நான் கேட்கிறேன். ஜிஎஸ்டி கூட்டத்தில் வரி தொடர்பாக பேசிய போது இவர் என்ன கருத்தை முன் வைத்தார். இந்த நடவடிக்கை குறிப்பை வெளியிட தயாரா. இவர் எதிர்ப்பு தெரிவித்ததை வெளியிட தயாரா. இதனை நான் சேலஞ்சாக கேட்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

August 7, 2026
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

August 7, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.