• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை – சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் கழக எம்.எல்.ஏ.க்கள் மனு

கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை – சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் கழக எம்.எல்.ஏ.க்கள் மனு

February 21, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை – சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் கழக எம்.எல்.ஏ.க்கள் மனு

by Namadhu Amma
February 21, 2022
in தற்போதைய செய்திகள்
0
கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை – சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் கழக எம்.எல்.ஏ.க்கள் மனு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை,

வாக்கு எண்ணிக்கையின் போது கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கக் கோரியும், வெற்றி பெற்றவர்களின் விவரங்களை உடனே அறிவிக்கக் கோரியும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,
முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான
எஸ்பி.வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்

சிறப்பு தேர்தல் பார்வையாளர் நாகராஜ் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ஆளும் தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினர். இது சம்பந்தமாக எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் அளித்தும் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஒருதலைபட்சமாக தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

மேலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். குறிப்பாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து அரசு சார்பில் கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சிறப்பு பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ் .அதிகாரி நாகராஜை நியமித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிகாரிகள் தி.மு.க.வுக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்து முடியும் வரை அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்து தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ண வேண்டும். ஒரு வார்டில் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் உடனடியாக தேர்தல் முடிவுகள் எவ்வித காலதாமதமின்றி அறிவிக்கப்பட வேண்டும்.

தி.மு.க.வினர் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் விதிமுறைகளை மீறி கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை திமுகவின் வெளி மாவட்ட குண்டர்கள் காவல்துறை உதவியுடன் எவ்வித அச்சமுமின்றி வழங்கி ஜனநாயக படுகொலை செய்துள்ளனர்.

இதற்கான வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள் செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையற்ற சட்ட சிக்கல்களை உருவாக்கி அதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி தி.மு.க.வினர் தங்கள் வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க அதிகாரத்தையும், பண பலத்தையும் பயன்படுத்த தயாராக உள்ளனர் என்பதை இதுநாள் வரை நடைபெற்ற நிகழ்வுகள் உறுதிபடுத்துகிறது.

மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று மாநகராட்சி மாமன்ற உறுப்பினர், நகராட்சி மன்ற உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணிக்கையின்போது ஒவ்வொரு வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் எவ்வித காலதாமதமின்றி உடனடியாக அறிவித்து வெற்றி சான்றிதழையும் உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.