• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
உடனிருந்து கொல்லும் விஷமாக ஓபிஎஸ் இதுவரை நம்முடன் இருந்துள்ளார்-சிவசுப்பிரமணியன் கடும் குற்றச்சாட்டு

உடனிருந்து கொல்லும் விஷமாக ஓபிஎஸ் இதுவரை நம்முடன் இருந்துள்ளார்-சிவசுப்பிரமணியன் கடும் குற்றச்சாட்டு

October 26, 2022
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

August 5, 2026
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு

இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, August 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

உடனிருந்து கொல்லும் விஷமாக ஓபிஎஸ் இதுவரை நம்முடன் இருந்துள்ளார்-சிவசுப்பிரமணியன் கடும் குற்றச்சாட்டு

by Namadhu Amma
October 26, 2022
in தற்போதைய செய்திகள்
0
உடனிருந்து கொல்லும் விஷமாக ஓபிஎஸ் இதுவரை நம்முடன் இருந்துள்ளார்-சிவசுப்பிரமணியன் கடும் குற்றச்சாட்டு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடலூர்

உடனிருந்து கொல்லும் விஷமாக ஓபிஎஸ் இதுவரை நம்முடன் இருந்துள்ளார் என்று கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தின் கழக பொன்விழா நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் பேசினார்.

கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக பொன்விழா நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடி அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் பேசியதாவது,

புரட்சித் தலைவர், அம்மா ஆகியோர் எனக்கு பின்னால் யார் தலைவர் என்று நமக்கு யாரையும் அடையாளம் காட்டவில்லை. கழகத் தொண்டர்கள்தான் தான் நமக்கு தலைவர்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இங்கே இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த கட்சிக்கு எந்த பொறுப்பிற்கு வேண்டுமானாலும் வரலாம். இது இந்தியாவிலேயே நமது கழகத்தில் மட்டும் தான்.

வேறு எந்த கட்சியிலும் இல்லை. ஆனால் திமுகவில் கருணாநிதி, அவருக்கு பின் ஸ்டாலின் அவருக்கு பின் உதயநிதி என அது குடும்பக் கட்சியாக உள்ளது. எடப்பாடி யார் மிகப்பெரிய அசைக்கு முடியாத தலைவராக வந்து விட்டார். இது காலத்தின் கட்டாயம். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர ஒ.பி.எஸ். கழகத்தில் அனைத்து சுக போகங்களையும் அனுபவித்த ஒருவர் இன்று கழக அலுவலகத்தை அடித்து நொறுக்குகிறார்.

திமுகவுடன் சேர்ந்து கொண்டு கூட்டு களவாணித்தனம் செய்கின்றார். உடனிருந்து கொல்லும் விஷமாக ஓபிஎஸ் இதுவரை நம்முடன் இருந்துள்ளார். கழகம் தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் ஜெயித்த வரலாறுகள் பல உண்டு. ஆனால் திமுக எந்த ஒரு காலத்திலும் கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிடதாக் வரலாறு கிடையாது.

சட்டப்பேரவையின் மாண்பு தெரியாத சபாநாயகர் இன்று தமிழக சட்டப்பேரவையில் உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள எந்த பிரச்சனையும் தீர்க்க ஸ்டாலின் தயாராக இல்லை. 2011 தேர்தலில் அம்மா நான் ஆட்சிக்கு வந்தால் தாலிக்கு தங்கம் வழங்குவேன், விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் வழங்குவேன், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

வென்றார், உடனடியாக அந்தத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றினார். ஆனால் திமுக கொடுத்த வாக்குறுதி எதை நிறைவேற்றி இருக்கின்றது. உரிமைத்தொகை 1000 ரூபாய் மாதம் தருவேன் என்று சொன்னார்களே, அதை கொடுத்தார்களா. மின்கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள்.

வீட்டு வரி உயர்த்தி விட்டார்கள். சொத்து வரி உயர்த்தி விட்டார்கள். ஆவின் பால் கூட விலை உயர்த்தி விட்டார்கள். டாஸ்மாக் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொன்னார்களே அதை மூடினார்களா? சொன்ன எந்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றினார்.

முதியோர் உதவித் தொகையையும் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் உயர்த்தி தருவேன் என்று சொன்னாரே செய்தாரா. எடப்பாடியார் 46 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் கொடுத்தார் .அதிலே பதினோரு லட்சம் பேருக்கு ஓய்வூதியத்தை நிறுத்திவிட்டது இந்த கையாலாகாத ஸ்டாலின் அரசு. இதையெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் பேசுகின்றனவா.

கடந்த 10 ஆண்டு காலத்தில் எங்களால் தர முடிந்த திட்டங்களை எல்லாம் ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள். 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டில் இருந்து நாங்கள் இறங்கிய போது எங்களால் செயல்படுத்த முடிந்த, எங்களால் கொடுக்க முடிந்த திட்டங்களை நீங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஏன் நிறைவேற்ற முடியவில்லை. என்ன காரணம் திறமை இல்லை. நிர்வாகத் திறமை கொஞ்சம் கூட இல்லை.

ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் மக்கள் நலத்திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணம் இருக்க வேண்டும். எங்களிடம் இருந்த அதிகாரிகள் தான் இன்றும் இருக்கின்றார்கள். எங்களிடம் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் உங்களிடம் ஏன் செயல்பட முடியவில்லை. மக்களை பற்றி சிறிதும் சிந்திக்காமல் குடும்பத்தை மட்டுமே சிந்தித்தால் எப்படி ஆட்சி நடத்த முடியும்.

எதற்கெடுத்தாலும் கமிஷன் கமிஷன் என்று தான் இந்த ஆட்சி உள்ளது. வயதில் முதிர்ந்த அனுபவம் உள்ள அமைச்சர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் பேச்சை எல்லாம் கேட்பதில்லை. எந்த அமைச்சர் அதிக கலெக்க்ஷன் செய்து தருகின்றாரோ அவர் பேச்சை மட்டும் தான் ஸ்டாலின் கேட்கின்றார்.

மின்சார கட்டணத்தை கழக ஆட்சி காலத்தில் உயர்த்தவே இல்லை. ஆனால் வீட்டு வாசல் முன் தட்டி வைத்துக்கொண்டு மின்சார கட்டணத்தை உயர்த்த கூடாது, சொத்து வரி உயர்த்த கூடாது என்று போராட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். இப்பொழுது ஏன் சொத்து வரி மின்சார கட்டணத்தையும் ஸ்டாலின் உயர்த்தி இருக்கின்றார்.

கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளில் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக எந்த ஒரு பொருட்களின் விலையும் உயராமல் பார்த்து கொரோனாவையும் சிறப்பாக கையாண்டு கொண்டு சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுத்தார் எடப்பாடியார்.

இதை நாங்கள் சொல்லவில்லை, இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் கொரோனாவை சிறப்பாக கையாண்டது என்று மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

அமைச்சர்களை ஸ்டாலினால் கேள்வி கேட்க முடியவில்லை பயந்து நடுங்கிக் கொண்டிருக்கின்றார் பொதுக்குழுவிலே போய் இவர்களால் அடுத்து என்ன பிரச்சனை வருமோ என்று பயந்து நடுங்குகிறேன் என்று பேசுகிறார்.

இப்படி 18 மாதங்களாக ஆட்சி நடத்திக் கொண்டு சொன்ன எதையும் செய்யாமல், கடந்த ஆட்சியில் செயல்படுத்தி திட்டங்களையும் செய்யாமல் ஒரு கடுமையான மக்கள் எதிர்ப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த ஆட்சியில் அதையெல்லாம் மறைப்பதற்காக மக்களின் கோபங்களை திசை திருப்புவதற்காக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றது.

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திமுகவை மக்கள் விரைவில் தூக்கி எறியும் காலம் வரும். எடப்பாடியார் விரைவில் தமிழகத்தின் முதல்வராக இதை யாராலும் தடுக்க முடியாது என்று மாநில அம்மா பேரவை துணை செயலாளர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.