• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் துரோகிகள், எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்போம்

பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் துரோகிகள், எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்போம்

September 26, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, August 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் துரோகிகள், எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்போம்

by Namadhu Amma
September 26, 2022
in தற்போதைய செய்திகள்
0
பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் துரோகிகள், எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்போம்
492
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா சூளுரை

மதுரை

வருகிற 29-ந்தேதி மதுரை வருகைதரும் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம் என்றும், பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் என்றும், துரோகிகள், எதிரிகளுக்கு அதிர்ச்சியை கொடுப்போம் என்று கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ சூளுரைத்துள்ளார்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வருகின்ற 29ம்தேதி மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது

கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கழக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் முதன் முறையாக வருகின்ற 29ஆம் தேதி மதுரை வருகிறார் எடப்பாடியார். அவருக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். திமுக இப்போது மக்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டது. அம்மாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் திமுக அரசு மீது மக்கள் கடும்கோபத்தில் இருக்கின்றனர்.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் நேரடியாக, கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

விழாக்களில் மட்டுமே முதலமைச்சர் கலந்து கொள்கிறார். அவரால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை, அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில் தற்போது சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போய் விட்டது. எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலாகட்டும், சட்டமன்ற பொது தேர்தலாகட்டும் பொதுமக்கள் நம்மை ஆதரிக்க தயாராகி விட்டனர்.

புரட்சித்தலைவர் மறைவிற்குப்பின் அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை காப்பாற்ற கடுமையாக போராடினார். அப்பொழுது துரோகிகளும், எதிரிகளும் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்ட போது, அதையெல்லாம் தகர்த்தெறிந்து மீண்டும் தமிழகத்தில் புரட்சித்தலைவர் புனித ஆட்சியை அம்மா அமைத்தார்.

அதுபோல் இன்றைக்கு அம்மாவின் மறைவிற்கு பின் நான்கரை ஆண்டுகாலம் சிறப்பான முறையில் ஆட்சியை எடப்பாடியார் செய்தார். தற்பொழுது சில தீய சக்திகளும், துரோகிகளும், விரோதிகளும் சேர்ந்து இந்த இயக்கத்தை அழிக்க முயற்சித்து வருகின்றனர். அதையெல்லாம் தகர்த்தெறிந்து இந்த இயக்கத்தை சீரோடும் சிறப்போடும் எடப்பாடியார் வழி நடத்தி வருகிறார்,

வருகிற 29ம் தேதி மதுரையில் எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் நம் இயக்கத்தை அழிக்க துடிக்கும் துரோகிகளுக்கும், விரோதிகளுக்கும் பாடம் புகட்டும் வகையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநாடு போல் இந்த பொதுக்கூட்டத்தை நடத்திட வேண்டும்.

மதுரை தான் அரசியல் களத்தில் யார் ஆட்சி செய்வது என்பதை நிர்ணயிக்கும். எனவே மதுரையில் நாம் லட்சக்கணக்கில் திரண்டு மீண்டும் அதிமுக ஆட்சி வருவதை உறுதிப்படுத்த வேண்டும். தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் எழுச்சியோடு மாநாடு போல் இந்த பொதுக்கூட்டத்தை நடத்திட வேண்டும்.

இவ்வாறு கக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

Share197Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.