• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
நாகர்கோவில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்

மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்

August 23, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்

by Namadhu Amma
August 23, 2022
in தற்போதைய செய்திகள்
0
நாகர்கோவில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கன்னியாகுமரி,

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீன உளவுக் ப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் உட்பட தென் மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுபோன்று எதிர்காலங்களிலும், சீன உளவுக்கப்பல் இலங்கையில் நிறுத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா தனது 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி தேசிய கொடியை ஏற்றி பட்டொளி வீசி பறக்க செய்த அதே நேரத்தில் சீனா சென்டரல் டெலிவிசனில் இந்திய எல்கைக்கு அருகில் காரகோரம் மலைப்பகுதியில் உள்ள சம தள பகுதியில் சீன ராணுவம் போர் ஒத்திகை செய்யும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

இந்திய எல்கைக்கு அருகே இந்த ஒத்திகையை வேண்டுமென்றே சீனா தனது டெலிவிசனில் காட்டியது. ஆகஸ்ட் 15-ந்தேதி அன்று இந்திய கடற்படையில் பொதுவாக ரோந்து பணிக்காக பயன்படுத்தும் ‘‘டோர்னியர்’’ ரக விமானம் ஒன்று இலங்கைக்கு நன்கொடையாக இந்தியா வழங்கியது.

இதற்கு அடுத்த நாள் ‘‘யுவான் வாங்-5” என்ற பெயரில் சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைகோள் ஆய்வு பணி என்று பதிவு செய்யப்பட்டுள்ள உளவுக்கப்பல் இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்து நங்கூரமிடப்பட்டது. இத்துறைமுகத்தை இலங்கை, தான் வாங்கிய கடனை கழிப்பதற்காக கடந்த 2017-ம் ஆண்டு சீனாவிற்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கியிருக்கிறது.

இந்த கப்பலை எரிபொருள் நிரப்புவதற்காகவும், உணவு பொருட்களை ஏற்றுவதற்காகவும் இந்த துறைமுகத்திற்கு வருவதற்கு 2022 ஜுலை 12 அன்று இலங்கையால் ராஜ்ய உறவு ஒப்புதல் வழங்கப்பட்டது. கப்பலை நிறுத்துவதற்கான அனுமதி முதலில் 2022 ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான காலத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த கப்பல் ஒரு உளவுக் கப்பல் என்ற பெயரில் பாதுகாப்பு கருதி இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று இந்தியா தனது எதிர்ப்பை இலங்கையிடம் தெரிவித்ததை தொடர்ந்து, இலங்கை வெளிவிவகாரத்துறை சீன தூதரகத்திடம் இப்பயணத்தை ஒத்தி வைக்க கேட்டுக் கொண்டது.

இந்த உளவுக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வராமல் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் சீனா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இக்கப்பல் இலங்கைக்கு வந்து விட்டது.

இது குறித்து சீனா கருத்து தெரிவிக்கையில் ‘’யுவான் வாங்-5” கப்பலின் கடற்பகுதி விஞ்ஞான ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடக்கிறதே தவீர வேறு எந்த நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்கோ, பொருளாதார நலன்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் 3-வது நாடு இதை தடுக்கக் கூடாது என்று விளக்கம் அளித்துள்ளது.

என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் இதுவரை நடைபெறாத வரலாற்றில் இல்லாத நிகழ்வாக இலங்கையில் சீன உளவுக் கப்பலை நிறுத்துவதற்கு அனுமதித்துள்ளது. இன்று வரை இந்த உளவுக் கப்பல் இலங்கையில் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்திலும் இந்நிலை தொடருமானால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் இதனால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி சூரியன் உதயத்தையும், சூரியன் அஸ்தமனத்தையும் காணுகின்ற சிறப்பு மிகுந்த உலக சுற்றுலா இடமாகும். முக்கடலான அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்துமகா சமுத்திரம் போன்றவற்றை உள்ளடக்கி, மேலும் இயற்கை வளங்களும், இயற்கை வளங்களை பாதுகாக்கின்ற அணைகளும் நிரம்பி காணப்படுகின்றது.

மேலும் அரியவகை மணல்களை பிரித்தெடுக்கும் மணவாளக்குறிச்சி மணல் ஆலையும் உள்ளது. இதைப்போன்று திருநெல்வேலி மாவட்டத்தில் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணத்தில் அமைய இருக்கும் ராக்கெட் தளம் போன்ற இந்தியாவின் உயிர்நாடியான மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மேற்குறிப்பிட்டவைகள் அமைந்துள்ளது.

இலங்கைக்கு மிக அருகாமையில் இப்பகுதிகள் உள்ள நிலையில் இலங்கையில் நிறுத்தப்படுகின்ற சீன உளவுக்கப்பல்களால் தமிழகத்தை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் ஆபாயம் உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு முறையாக திட்டமிட்டு, அண்டை நாடான இலங்கையில் நமது நாட்டின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற உளவுக்கப்பல்கள் வருவதை தடுப்பதற்கு மத்திய அரசு முன்கூட்டியே திட்டமிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எதிர்காலங்களிலும் இதுபோன்று சீன உளவுக் கப்பல் இலங்கையில் நிறுத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.