• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

அரசு மீன் வளக்கல்லூரி அமைக்க வேண்டும்

May 5, 2022
80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

August 7, 2026
80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

August 7, 2026
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து

August 7, 2026
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி

August 7, 2026
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

அரசு மீன் வளக்கல்லூரி அமைக்க வேண்டும்

by Namadhu Amma
May 5, 2022
in தற்போதைய செய்திகள்
0
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல்

சென்னை,

திருவண்ணாமலை சாத்தனூர் அணை அல்லது போளூர் தொகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் அரசு மீன் வளக் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

மழை நீரையும் மனமுவந்து ஏற்று, விதவிதமாய் மீன்களை தினமும் முகர்ந்து, உற்று வாழும் மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமெனில் உள்நாட்டு மீன் வளத்தை மேம்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு உள்நாட்டு நீர் வள ஆதாரங்களான, தீர் தேக்கங்கள், பெரிய சிறிய பாசன குளங்கள், பருவ மழையால் நிரம்பும் குறுகியக்கால குளங்கள், குட்டைகள், ஆறுகள், கழிமுகங்கள் ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு மீன்வளம் அதிகரிக்கப்பட வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம்.

மீன்வள பிரிவானது, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. மீன், அதன் ஊட்டச்சத்து மற்றும் அதன் சுவைக்காக பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மீனவர்களின் நலனுக்காக, ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக, முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யவதற்காக, மீன் வளத்தை பாதுகாத்தல், நிலையான மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு,

புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட, மீன்பிடிக்கும் இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையகப்படுத்துவதை உறுதிப்படுத்த, மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளங்கள் ஆராய்ச்சி மையம், கல்லூரிகளின் பங்களிப்பு தேவைப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை சாத்தனூர் அணையானது உள்நாட்டு மீன் வளத்திற்கு சிறந்த நீர்வள ஆதாரமாக விளங்கி வருகிறது.

செண்பகத்தோப்பு அணை, மிருகண்டா நதி அணை, குப்பணந்தம் அணை, தென்பெண்ணையாறு, செய்யாறு ஆகிய ஆறுகளும் இம்மாவட்டத்தில் தமிழ்நாட்டு நீர்வள ஆதாரமாக உள்ளது. எனவே, இப்பகுதியின் வளர்ச்சிக்காக இந்தப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மீனவ இன மக்களுக்காக இந்த மாவட்டத்தில் அரசின் சார்பில் ஒரு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அரசின் மூலமாக அமைத்து தர வேண்டும்.

கடலோர மாவட்டங்களில் மட்டுமே மீன்வள கல்லூரிகள் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கின்றன. உள்நாட்டு மீன்வளத்தை பெருக்கும் வகையில் புதிய மீன்வள கல்லூரிகளை அமைப்பதன் மூலம் கல்வியில் சிறப்புத்தன்மை, ஆராய்ச்சியில் தனித்தன்மை, எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, என்ற மூன்று இலக்குகள் மூலம் இளைஞர்களை மீன் வளர்ப்பு மற்றும் மீன்வளம் சார்ந்த தொழில் முனைவோர்களாக ஆக்குவதற்காகவும், ஆலோசகர் ஆக்குவதற்காகவும், திறன் சார்ந்த கல்வி அளிப்பதற்காகவும், உள்தர அளவீடு அமைப்பு மூலம் கல்வி அளிப்பதற்காகவும், ஆழ்கடல் மீன்பிடிப்பதற்காகவும், போன்ற பல்வேறு வசதிகளை பெற்றிட திருவண்ணாமலை மாவட்டத்தில், சாத்தனூர் அணை பகுதியில் அல்லது மீனவர் சமுதாயம் மிகுந்த போளூர் சட்டமன்ற தொகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் அரசு மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைத்து தருமா?

இவ்வாறு முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

80-வது சுதந்திர தின விழா – சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

August 7, 2026
80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்

August 7, 2026
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

August 7, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.