மதுரை
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 34-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி வருகிற 24-ந்தேதி அன்று அனைத்து கிளைகளிலும் திருஉருவபடத்தை அலங்கரித்து மரியாதை செலுத்த மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மேலூர் பி.எஸ்.துரைப்பாண்டி மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் அம்பலம், மாவட்ட கழக துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள், பொன் ராஜேந்திரன், பொன்னுச்சாமி, குலோத்துங்கன், வெற்றிசெழியன்,
கார்சேரி கணேசன், வாசுஎன்ற பெரியணன், பகுதி கழக செயலாளர்கள் வண்டியூர் செந்தில்குமார், வக்கீல் ஜீவா, வக்கீல் கோபி, கே.பி.சரவணன், முருகேசன், பன்னீர்செல்வம், நகர செயலாளர் பாஸ்கரன், பேரூர் கழக செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் கழக உட்கட்சி தேர்தல் முதல் கட்டமாக 36 மாவட்டங்களில் ஜனநாயக முறையில் நடைபெற்றது. தற்போது வருகின்ற 22. 23-ந்தேதிகளில் 2-வது கட்டமாக கழக அமைப்பு தேர்தல் 40 மாவட்டங்களில் ஜனநாயக முறையில் நடைபெறுகிறது.
முதல் கட்டமாக 36 மாவட்டங்களில் ஜனநாயக முறையில் தேர்தலை சிறப்பாக நடத்தி காட்டிய கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
வருகிற 24-ந்தேதி கழக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு நாள். அன்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் புரட்சித்தலைவர் திருஉருவபடத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்த வேண்டும். புரட்சித்தலைவரின் புகழை அழியா புகழாக உருவாக்கிட நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.


















