சென்னை
இம்மானுவேல் சேகரன் தியாகத்தை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
அடக்குமுறைகளுக்கு எதிராக போராடியவரும், சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவருமான தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவர் தம் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
















