கோவை,
புதிய ஆட்டோவுடன் ஆசி பெற வந்த தொண்டரின் கோரிக்கையை ஏற்று அந்த ஆட்டோவை ஓட்டி அவரது ஆசையை நிறைவேற்றினார் கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கழக தொண்டர் ஒருவர் தான் புதிதாக வாங்கிய ஆட்டோவை எடுத்துக்கொண்டு கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் ஆசி பெற வந்தார். மேலும் தான் புதிதாக வாங்கிய ஆட்டோவை ஓட்டி தனக்கு ஆசி வழங்குமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து கழக தலைமை நிலைய செயலாளரும், கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி, அந்த ஆட்டோவை சிறிது தூரம் ஓட்டிக்காட்டி கழக தொண்டனின் ஆசையை நிறைவேற்றினார்.
இதையடுத்து கழக தொண்டனின் கோரிக்கையை நிறைவேற்றிய கழக தலைமை நிலைய செயலாளர் என எஸ்.பி.வேலுமணி ஆட்டோ ஓட்டிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கழக தலைமை நிலைய செயலாளரும், கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் பகுதி கழக தொண்டர் நீரோஜ்குமார். தான் புதியதாக வாங்கிய ஆட்டோவை என்னிடம் காண்பித்து அதை இயக்கி பார்க்கும்படி விதித்த அன்பு கட்டளையினை ஏற்று, அந்த ஆட்டோவை இயக்கி பார்த்தேன்.
பொதுமக்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ என்பதால் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் ஆட்டோவை இயக்க வேண்டும் என்றும், பயணம் செய்யும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறி, அந்த தொண்டர் தன் வாழ்வில் வளமும் ஏற்றமும் பெற வேண்டும் என வாழ்த்தினேன்.
இவ்வாறு கழக தலைமை நிலைய செயலாளரும், கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


















