• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

மக்கள் விரோத தி.மு.க அரசுக்கு எதிரான கண்டன குரல் கோட்டையில் எதிரொலிக்கும்-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

July 25, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, February 3, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home மற்றவை

மக்கள் விரோத தி.மு.க அரசுக்கு எதிரான கண்டன குரல் கோட்டையில் எதிரொலிக்கும்-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

by Namadhu Amma
July 25, 2022
in மற்றவை
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரோடு,

பவானியில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டன குரல் கோட்டையில் எதிரொலிக்கும் என்றும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் பேசினார்

விடியா தி.மு.க அரசை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பாக பெருந்துறை தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழகசட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கழக அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.ஜெயக்குமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள் ஜோதி கே.செல்வராஜ் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

கழக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியை சிறப்பாக நடத்தினார். கழகத்தையும் சிறப்பாக வழி நடத்துவார்.

தி.மு.க. ஆட்சியில் விண்ை முட்டும் விலைவாசியால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். மின்வெட்டுடன் மின் கட்டணமும் உயர்ந்துள்ளது. சொத்து வரி, வீட்டு வரி உயர்ந்துள்ளது. அம்மா அரசின் நலத்திட்டங்களை நிறுத்துகிறது திமுக அரசு.

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பவானியில் இன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மக்கள் விரோத தி.மு.க.வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தின் குரல் கோட்டையில் எதிரொலிக்க வேண்டும்.

இவ்வாறு ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.சி.பொன்னுதுரை, கே.எஸ்.பழனிசாமி, டாக்டர் பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர்கள் டி.வி.ரஞ்சித்ராஜ், சி.டி.ரவிச்சந்திரன், கே.கே.சக்திவேல் தனசேகர், சி.பி.ராமசாமி, மாவட்ட நிர்வாகிகள் மைனாவதி கந்தசாமி, கே.பி.எஸ்.மணி, பேரூராட்சி செயலாளர்கள் கல்யாணசுந்தரம், மே.எம்.பழனிசாமி, பூபாலகிருஷ்ணன், துரைசாமி, வி.கே.சின்னசாமி, கமலக்கண்ணன், சார்பு அமைப்பு செயலாளர்கள் கே.ஆர்.ஜான், அப்புகுட்டி, மார்ட்டின் ராஜ், உமா, தங்கவேல், பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள், ராமசாமி, திங்களூர் கந்தசாமி, பொன்முடி சந்திரசேகர், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், துடுப்பதி அன்பரசு, குருசாமி, பெருந்துறை சங்கர், பெட்டிசன் மணி, கவுன்சிலர் குணசேகரன், ஆறுமுகம், ரொட்டி பழனிசாமி, மண்டபம் ரவி, தர்மராஜ், சீனிவாசன், டைலர் ரவி, எம்.எம்.சோமு, கார்த்தி, பாலு, ரவி, போட்டோ மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கழக பொதுக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எம்.தங்கவேலு, ஜெகதீசன், முனியப்பன், மேகநாதன், நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எம்.ஜி.நாத் (எ) மானதயன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஏ.பிரகாஷ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், பூங்கோதை வரதராஜன், எம்.எஸ்.வாசு, கே.சி.கணேசன், கே.கே.விஸ்வநாதன், விவேகானந்தன், ஜீகுனு பாலு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கராத்தே பெரியசாமி, பிரபாகரன், ஆண்டியப்பன், ஈஸ்வரமூர்த்தி, மாதேஸ்வரன், திருநாவுக்கரசு, சோமு, எஸ்.எஸ்.மாரியப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் நன்றி கூறினார்.

முன்னதாக பவானி நகர கழக அலுவலகத்தில் பவானி நகர கழக செயலாளர் எம்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற பவானி தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் ரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பேசுகையில், பவானி நகரமே குலுங்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.