• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம்

தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம்

May 31, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, February 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம்

by Namadhu Amma
May 31, 2022
in தமிழகம்
0
தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கழக புரட்சித்தலைவி பேரவை தீர்மானம்

சென்னை

தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்ட கிராமங்கள் தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் செய்வதோடு தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைத்திடுவோம் என்று தலைமை கழகத்தில் அம்மா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர்களுக்கு நடைபெற்ற செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கு 2 நாள் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. அம்மா ேபரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இப்பயிற்சி முகாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்டு தன் வாழ்நாளெல்லாம் உழைத்திட்ட தமிழர் குலசாமி புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் தொலை நோக்கு சிந்தனையில் உதித்த சீரிய திட்டங்களான ஏழை எளியோர் பசிப்பிணி போக்குகிற 2.08 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்குகிற மகத்தான திட்டம்,

பெண் கல்வியை ஊக்குவிக்க தாலிக்கு தங்கம் வழங்குகிற திட்டத்தின் மூலம் இதுவரை 12.51 லட்சம் பெண்களுக்கு தங்கம் வழங்கிய சரித்திர சாதனை! கர்ப்பிணி தாய்மார்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கிய மகத்தான சாதனை! பெண்குழந்தைகள் பாதுகாக்கும் மகத்தான திட்டம்!

பள்ளிக்கல்வியை ஊக்குவிக்க 14 வகை கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்குகிற மகத்தான திட்டம், பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் படிக்கின்ற ஏழை, எளிய சாமானிய வீட்டு ள்ளைகளுக்கு விலையில்லா மடிகணினி வழங்கும் திட்டத்தின் மூலம் 53 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிகணிணி வழங்கிய வரலாற்று சாதனை!

117 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தியும், 1,079 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தியும், 604 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தியும் காட்டிய மகத்தான சாதனை! இணைய வழி வகுப்பில் கலந்து கொள்ளும் 9.69 லட்சம் மாணவர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா வழங்கிய மகத்தான சாதனை!

ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கிட தமிழகம் முழுவதும் 700 அம்மா உணவகங்கள் உருவாக்கப்பட்ட சரித்திர சாதனை! நிலமில்லாத ஏழை, எளியோர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை 25 லட்சம் குடும்பங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் வழங்கிய வரலாற்று சாதனை! சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதிய தொகை ரூ.500-லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தி மகத்தான சாதனை! அனைத்து குடும்பத்திற்கும் மாதந்தோறும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கிய சரித்திர சாதனை!

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திட 1,11,444 விலையில்லா கறவை மாடுகளும், 52,88,608 ஆடுகள் வழங்கிய மகத்தான சாதனை! ஏழை எளியோர்களுக்கு பசுமை வீடுகள் வழங்கிய சரித்திர சாதனை! ஏழை எளியோர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கிய மகத்தான சாதனை!

பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவீத இடஒதுக்கீட்டினை வழங்கி ஒட்டுமொத்த இந்தியாவே பாராட்டும் மகத்தான சாதனை! பெண்ணினத்தை காக்கும் வண்ணம் அன்னை தெரசா பாராட்டிய மகத்தான தொட்டில் குழந்தை திட்டம்,

பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மகளிர் காவல் நிலையங்கள், பெண் கமாண்டோ படைகள் என உருவாக்கி பெண் சமுதாயத்தை காக்கும் வரலாற்று சாதனை! சமூக நீதியை காத்திடும் வண்ணம் இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் 69 சதவீத இடஒதுக்கீட்டினை தனி சட்டமாக இயற்றி சரித்திர சாதனை!

அதனைத்தொடர்ந்து எடப்பாடியார் தலைமையிலான ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலோடு நடைபெற்ற அம்மா ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1,132 கோடியில் 5,586 நீர் நிலைகளை சீரமைப்பு செய்து 4 சதவீதமாக இருந்த நீர் பரப்பளவை 6 சதவீதமாக உயர்த்திய பார் போற்றும் சரித்திர சாதனை!

காவேரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதை மீட்டெடுக்க “நடந்தாய் வாழி காவேரி“ திட்டத்தினை உருவாக்கிய மகத்தான சாதனை! 50 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.9,006 கோடி இழப்பீட்டு தொகையை பெற்று தந்த வரலாற்று சாதனை! கடந்த 2016-ம் ஆண்டு 5,318 கோடி ரூபாய் நிலுவையில் இருந்த பயிர்க்கடனை ரத்து செய்து 12 லட்சம் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றியது போல் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.12,110 கோடி பயிர் கடனை ரத்து செய்து அதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றி வைத்த மகத்தான சாதனை!

ரூ.1,652 கோடியில் விவசாயிகளின் 60 ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு- அவினாசி திட்டம் செயல்படுத்திய வரலாற்று சாதனை! காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த சரித்திர சாதனை!

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ரூ.827 கோடி மதிப்பீட்டில் 10,41,315 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய வரலாற்று சாதனை! 2017-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரண தொகையாக வழங்கிய மகத்தான சாதனை! ரூ.14,400 கோடி மதிப்பீட்டில் காவேரி – வைகை-குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவை நிறைவேற்றிய மகத்தான சாதனை!

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நிர்வாக வசதிக்காக 6 புதிய மாவட்டங்கள், 7 வருவாய் கோட்டங்கள், 27 வட்டங்கள், 2 குறுவட்டம் மற்றும் 6 வருவாய் கிராமங்கள் உருவாக்கி காட்டிய சரித்திர சாதனை! புரட்சித்தலைவி அம்மாவின் உன்னத திட்டமான உழைக்கும் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்துடன் இரண்டு சக்கர வாகன திட்டத்தின் மூலம் 2.85 லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கிய மகத்தான சாதனை!

ஏழை, எளிய மக்களுக்காக 2000 அம்மா மினி கிளினிக் உருவாக்கிய மகத்தான சாதனை திட்டம், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்ட தொகையை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி 50 லட்சம் நபர்கள் பயன்பெற்ற சரித்திர சாதனை!

தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்றுத்தந்த வரலாற்று சாதனை! புதிதாக 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு இதில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கிய மகத்தான சாதனை! புதிதாக 7 சட்டக் கல்லூரிகள், 21 பல்கலை தொழில்நுட்ப கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என கல்வியில் மாபெரும் புரட்சியை உருவாக்கி இதன் மூலம் இந்தியாவிலே உயர் கல்வி சேர்க்கையில் தமிழகம் 51 சதவீதமாக உயர்த்தி காட்டிய மகத்தான சாதனை!

2.08 கோடி குடும்பங்களுக்கு தை திருநாளை முன்னிட்டு 2500 ரூபாய் பொங்கல் பரிசுடன் பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், ஒரு முழுநீள கரும்பு வழங்கிய மகத்தான சாதனை!

கடந்த 10 ஆண்டுகளில் 110 விதியின் கீழ் 1704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இதில் 97 சதவீத பணிகள் நிறைவேற்றிய சரித்திர சாதனை!

உலக முதலீட்டாளர் மாநாடு-2019 மூலம் ரூ.3,00,501 கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 10.5 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. உலக முதலீட்டாளர் மாநாடு 2019-க்கு பிறகு 79 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு ரூ.52,069 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 1,24,829 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

வெளிநாடு பயணத்தின் போது 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.8,835 கோடி தொழில் முதலீடுகள், 35,520 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளி அள்ளி வழங்கிய சரித்திர சாதனை! தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களை வரவேற்க “யாதும் ஊரே” என்ற திட்டத்தை துவக்கி மகத்தான சாதனை! விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிய மகத்தான சாதனை!

ரூ.3,150 கோடியில் 33 கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வரலாற்று சாதனை! ரூ.9,637 கோடியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 454 திட்ட பணிகள் நிறைவேற்றி சரித்திர சாதனை! வெள்ள பாதிப்பை தடுக்க அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் ரூ.1,387 கோடியில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வரலாற்று சாதனை!

சேலம் மாவட்டத்தில் 1,103 ஏக்கர் பரப்பளவில் ரூ1,203 கோடியில் ஆசியா கண்டத்திலே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவை உருவாக்கிய வரலாற்று சாதனை! ரூ.1,440 கோடி செலவில் 12 மீன்பிடி துறைமுகங்கள், ரூ.520 கோடியில் 43 இடங்களில் மீன்பிடி இறங்கு தளங்கள் உருவாக்கிய மகத்தான சாதனை! 100 கால்நடை நிலையங்கள் மற்றும் 100 சிறு கால்நடை பண்ணைகள் தொடங்கி வரலாற்று சாதனை!

அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளத்தை வழங்கிய மகத்தான சாதனை! அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி வரலாற்று சாதனை!

கொரோனா ஊரடங்கு காலத்திலும் 2.97 கோடி மக்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் விலையில்லா உணவு வழங்கிய மகத்தான சாதனை! கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் 16,883 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி திறனை 2021-ம் ஆண்டில் 32,149 மெகாவாட் என இரு மடங்காக உயர்த்தி தமிழகத்தை மின் மிகை மாநிலமாக உருவாக்கிய வரலாற்று சாதனை!

காற்றாலை மின் உற்பத்தியில் 8,552 மெகாவாட் நிறுவு திறனுடன் இந்தியாவிலே தமிழகம் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடமாக உருவாக்கிய சரித்திர சாதனை! சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1,000 பெறும் 29 லட்சம் பயனாளிகளின் எண்ணிக்கையை 34 லட்சமாக உயர்த்திய சரித்திர சாதனை!

காவேரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழுவை அமைத்து 50 ஆண்டு கால காவேரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்ட வரலாற்று சாதனை! முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தி காட்டிய சரித்திர சாதனை! தி.மு.க.,

காங்கிரஸ் மத்திய அரசின் போது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க தமிழக அரசையும் உச்சநீதிமன்றத்தில் வாதியாக சேர்க்கப்பட்ட வரலாற்று சாதனை! தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் கிள்ளி கொடுத்தால் போதாது என்று அள்ளி அள்ளி கொடுத்து மக்களின் அட்சய பாத்திரமாய் அம்மா அரசு தாய் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்து சரித்திர சாதனை படைத்ததை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

கழக ஆட்சி என்றாலே தமிழகம் அமைதியான மற்றும் பாதுகாப்பு மிக்க அமைதிப்பூங்காவான மாநிலம் என்றும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாகவும் தமிழகம் இருந்தது. இந்தியாவிலே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக கோவை, மற்றும் சென்னை அம்மா ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அம்மா அரசில் நில அபகரிப்பு குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்பட்டு நில உரிமைதார்களிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அம்மா பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் குற்றங்களை குறைத்திடும் வண்ணம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க கடுமையான தண்டனை சட்டங்கள் உருவாக்கப்பட்டு இதன் மூலம் குற்றங்கள் குறைக்கபட்டது.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.