• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சொத்து வரி உயர்வு ஸ்டாலினின் முதல் பரிசு

April 4, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, February 8, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

சொத்து வரி உயர்வு ஸ்டாலினின் முதல் பரிசு

by Namadhu Amma
April 4, 2022
in சிறப்பு செய்திகள்
0
2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விளாசல்

சேலம்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் புறநகர் மாவட்டத்தில் தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, வீரபாண்டி ஆகிய இடங்களில் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி, குளிர்பானம் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கழகத்தை பொறுத்த வரைக்கும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் சேவை செய்வதிலே முதன்மையாக விளங்கும் இயக்கம் ஆகும். இன்றைக்கு ஆளுகின்ற பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதிலே முதன்மையாக விளங்குகின்ற கட்சி என்று சொன்னால் அது கழகம் ஆகும்.

மக்களுக்கு பிரச்சினை ஏற்படுகின்ற பொழுது தோள் கொடுக்கின்ற கட்சி கழகம் ஆகும். தைப்பொங்கல் வருகின்ற பொழுது அம்மாவுடைய அரசு பொங்கல் தொகுப்பு கொடுத்தது மட்டுமல்லாமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2500 ரூபாய் வழங்கி பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுத்த அரசு கழக அரசு ஆகும்.

கொரோனா காலத்திலே ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தங்கு தடையில்லாமல் விலையில்லாமல் 10 மாத காலம் வழங்கிய அரசு அம்மாவுடைய அரசு.

இன்றைய தினம் பத்திரிகையிலே பார்த்திருப்பீர்கள். இன்றைக்கு நகர்ப்புறத்தில் வசிக்கின்ற மக்களுக்கு பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சியில் வசிக்கின்ற மக்களுக்கு ெசாத்து வரி 150 சதவீதம் வரை உயர்த்தி உள்ளார்கள். 1000 ரூபாய் வீட்டு வரி செலுத்துபவர்கள் 2500 ரூபாய் செலுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் முடிகின்ற வரைக்கும் காத்திருந்தார்கள்.

வாக்களித்த மக்களுக்கு முதல் பரிசு ஸ்டாலின் கொடுத்துள்ளார். இன்னும் மின்சார கட்டணம் உயர்வு உள்ளது, போக்குவரத்து கட்டணம் உயர உள்ளது, குடிநீர் கட்டணம் உயர உள்ளது. இப்படி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடும் கட்சி தி.மு.க. கட்சியாகும். ஆகவே மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

கழகம் எம்.ஜி.ஆர். காலத்தில் தொடங்கி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி நாட்டு மக்களுக்கு நன்மையை கொடுத்தார்கள். அதே வழியில் அம்மாவுடைய அரசில் ஏராளமான திட்டங்களை நாம் செய்து கொடுத்தோம்.

தடுப்பணைகளை கட்டி கொடுத்துள்ளோம். நல்ல சாலை வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்துள்ளோம். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளோம்.

அதுமட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைக்கு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து இன்றுவரை பத்து மாத ஆட்சிக் காலத்தில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து இன்றைக்கு படு பாதாளத்துக்கு போய்விட்டது. எங்கு பார்த்தாலும் கூட்டு பாலியல் பலாத்காரம், சிறுமி கற்பழிப்பு இப்படியே தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு சட்டம்- ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த துறையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அதை பற்றி கண்டுகொள்ளவே இல்லை. தினந்தோறும் பத்திரிகைகளில் வரும் செய்தியையாவது படித்து பார்த்து இனியாவது இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோல் போதைப் பொருள் எங்கு பார்த்தாலும் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. ஆகவே கழக அரசை பொறுத்தவரைக்கும் கடுமையான சட்டம் இருந்தது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் தண்டனை வழங்கி சட்டத்தின் கீழ் ஆட்சி நடைபெற்றது.

இன்றைய தினம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. இன்றைக்கு எங்கே பார்த்தாலும் போதை பொருள், பாலியல் பலாத்காரம், சிறுமி கற்பழிப்பு இப்படி தொடர்கதையாக இருந்து கொண்டிருக்கிறது.

இவை மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எவ்வளவு அராஜகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க.வினர் கடைக்கு சென்றால் பொருளை வாங்கிக்கொண்டு அந்த பொருளுக்கு தேவையான விலையை கேட்டால் அவர்களை அடிக்கின்றார்கள். அதேபோல் காவல்துறையை மிரட்டுகிறார்கள். எல்லா தொலைக்காட்சிகளிலும் பார்த்திருப்பீர்கள்.

ஆக இப்படி தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மாவுடைய அரசு இருக்கின்ற வரை மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்தது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி தொடரும். இது கழகத்தின் லட்சியம் ஆகும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.