• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
9 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு சரிவு -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

9 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு சரிவு -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

February 10, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, February 8, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

9 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு சரிவு -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

by Namadhu Amma
February 10, 2022
in சிறப்பு செய்திகள்
0
9 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு சரிவு -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

செங்கல்பட்டு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதால் 9 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 3-வது நாளான நேற்று தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், வேலூர் மாநகராட்சிகளில் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார்.

தாம்பரத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கழக வேட்பாளர்களை ஆதரித்து சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது:-

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தேர்தல் காலத்தில் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றினார். அதே வழியில் வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் தேர்தல் வருகின்ற பொழுது, கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து கொண்டு கழகத்தின் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் என்னென்ன குறிப்பிடப்பட்டிருந்ததோ அதை எல்லாம் மக்களுக்கு கொண்டு வந்து நிறைவேற்றுவார்.

விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, 2021 வரை 52 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு மடிகணினி கழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, புத்தகம், நோட்டு, பை போன்ற அனைத்தும் தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்த ஒரே கட்சி கழகம் ஆகும். முதியோருக்கு உதவித்தொகை, மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம், தாலிக்கு தங்கம் போன்ற அற்புதமான திட்டங்களை வழங்கியது கழக அரசு.

தி.மு.க. அரசால் நாட்டிற்கு என்ன பலன் கிடைத்துள்ளது? அடித்தட்டில் உள்ள ஏழை மக்களுக்கு என்ன கிடைத்துள்ளது? கழக அரசின் போது வீடு இல்லாதவர்களுக்கு எல்லாம் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுத்தோம் இந்த திட்டங்களை எல்லாம் செய்த காரணத்தினால் தான் மக்கள் நிம்மதியாக உள்ளனர். இந்தியாவிலேயே தமிழகம் ஒரு வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாவதற்கு கழக அரசு எடுத்த நடவடிக்கை தான்காரணம்.

சிறு, குறு தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கு அம்மாவுடைய அரசு தான் பல்வேறு நிதி உதவிகளை செய்து இந்தியாவிலேயே சிறு குறு தொழில் செய்வதில் முதன்மை வகித்தது. பல பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டது, அற்புதமான சாலைகள் கொடுக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் திட்டம் ரூ.62,000 கோடிக்கு அடிக்கல் நாட்டி சாதனை படைத்தது அம்மாவின் கழக அரசு. 118 கிலோ மீட்டர் சென்னை மாநகரம் முழுவதும் பாலங்கள், சாலைகள் கொடுத்து சாதனை படைத்துள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக ெசன்னையை உருவாக்குவதற்காக 14000 கோடி ரூபாயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்திலிருந்து துறைமுகம் வரை, கழக அரசின் போது தான் அடிமட்டத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை குடும்பத்தில் இருக்கின்ற மக்களை சமூக பொருளாதாரத்தில் உயர்த்தியது கழக அரசு.

பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளதால் கழகத்தினர் நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கிறோம், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஸ்டாலின் முதலமைச்சரானால் நிறைய செய்வார் என்ற எதிர்பார்த்தனர் மக்கள். ஆனால் 9 மாதத்தில் மக்களுடைய எதிர்ப்பை சம்பாதித்து உள்ளனர். 9 மாத காலத்தில் ஒரு ஆட்சிக்கு சரிவு ஏற்பட்டுள்ளது என்றால் அது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தான்.

சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னார். அந்த ரகசியம் தான் தெரியும் அல்லவா? இப்போது நீட் தேர்வினை ரத்து செய்யலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை. ஏன் இப்படி பச்சைப் பொய் பேசணும்? இப்போது எங்கே போனார் என்றே தெரியவில்லை?

தற்போது முதன் முதலாக தாம்பரம் மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலே கழகத்தின் சார்பாக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து, தாம்பரம் மாநகராட்சி கழகத்தின் கோட்டை என்பதை உறுதி செய்து முத்திரையை பதிக்க வேண்டும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கணிதா சம்பத், ப.தன்சிங், ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன், நகர கழக செயலாளர் எம்.கூத்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.