கள்ளக்குறிச்சி
கழகம் இன்றைக்கு வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது. விரைவில் தமிழகத்தை மீண்டும் ஆளும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் கழக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் மோகன், சிவா ராஜமாணிக்கம், கோபால், கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட கழக செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கழகம் மாபெரும் மக்கள் இயக்கம். அம்மா அவர்கள் என்னை மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பினார். அப்போது டெல்லிக்கு அம்மா அவர்கள் வந்தால் அங்கு இருப்பவர்கள் அம்மாவை காண ஆவலுடன் வருவார்கள். கழகம் ஒரு கட்டுப்பாடான இயக்கம். கழகம் இன்றைக்கு வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது. நாளை தமிழகத்தின் ஆட்சி பொறுப்புக்கு வரும்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் கழகத்தை வழி நடத்தி வருகிறார்கள். இந்த தேர்தல் கழகத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே நாம் இந்த தேர்தலை சிறப்பாக நடத்தி பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் சிறந்த முறையில் கழக பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி. டாக்டர் காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ அழகுவேல்பாபு, மாவட்ட அவைத்தலைவர் பச்சையாபிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், ராஜேந்திரன், அரசு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


















