• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்ற எடப்பாடியார் -தமிழகத்தை மீண்டும் ஆள வாருங்கள் என விண்ணதிர கோஷங்கள்

மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்ற எடப்பாடியார் -தமிழகத்தை மீண்டும் ஆள வாருங்கள் என விண்ணதிர கோஷங்கள்

September 30, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, February 2, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்ற எடப்பாடியார் -தமிழகத்தை மீண்டும் ஆள வாருங்கள் என விண்ணதிர கோஷங்கள்

by Namadhu Amma
September 30, 2022
in சிறப்பு செய்திகள்
0
மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்ற எடப்பாடியார் -தமிழகத்தை மீண்டும் ஆள வாருங்கள் என விண்ணதிர கோஷங்கள்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை,

சிவகாசி அருகே திருத்தங்கலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்து அங்கிருந்து சிவகாசிக்கு மக்கள் வெள்ளத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்றார்.

அவருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் திரண்டிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகத்தை மீண்டும் ஆள வாருங்கள் என்று விண்ணதிர கோஷங்களை எழுப்பி எழுச்சிமிக்க வரவேற்பை அளித்தனர்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சிவகாசி அருகே திருத்தங்கலில் விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம், மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.

இதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் நேற்று காலை 7 மணி அளவில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வந்தடைந்தார்.

அப்போது மதுரை விமான நிலையத்தில் கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ, கழக துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ,

கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சரும், கழக கொள்கை பரப்பு துணை செயலாளருமான ம.பா.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ,

கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பிஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ, ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ராஜ்சத்யன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், சதன் பிரபாகர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து எடப்பாடியாரை வரவேற்றனர்.

பின்னர் திருமங்கலம் வந்த கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஹரிஷ் ஹோட்டல் அருகே கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி எம்.எல்.ஏ, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன், தேனி நாராயணசாமி, லோகிராஜன் உள்ளிட்ட தேனி மாவட்ட கழக நிர்வாகிகள், தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ,

முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் அமைச்சரும், கழக மகளிர் அணி துணை செயலாளருமான வி.எம்.ராஜலட்சுமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து பாரதி யுகேந்திரா சார்பில் காஞ்சி மகா பெரியவர் படம் எடப்பாடியாருக்கு வழங்கப்பட்டது

அதனைத்தொடர்ந்து ரிங் ரோடு வழியாக பிரச்சார வாகனத்தில் மேலக்கோட்டை அருகே எடப்பாடியார் வருகை தந்தார். அப்போது கழக அம்மா பேரவை சார்பில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வாழ்த்து கோஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சார வாகனத்தில் நின்றவாறு மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்ற கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் இரட்டைவிரலை காட்டி கழகத்தினரை உற்சாகப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து வழியெங்கும் கழகத்தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து எடப்பாடியாரை வரவேற்றனர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சார்பில் அவரது மகள் பிரியதர்ஷினி வெற்றிக்கு அடையாளமாக வீரவாளை நினைவுப்பரிசாக கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு வழங்கி வரவேற்பு அளித்தார்.

அதைத்தொடர்ந்து பெண்கள் பூரண கும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று மலர் தூவி எடப்பாடியாரை் வரவேற்றனர், மேலும் கழக தொண்டர்கள் வேண்டுகோளுக்கிணங்க, வெள்ளை புறா ஒன்றை எடப்பாடியார் பறக்க விட்டார்.

வெற்றிக்கு அடையாளமாக வெற்றிலை மாலை எடப்பாடியாருக்கு அணிந்து வரவேற்கப்பட்டது. மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சராக வர வேண்டும் என்று அடிப்படையில் கழக தொண்டர்கள் எடப்பாடியாருக்கு கிரீடம் சூட்டி மகிழ்ந்தனர்.

பின்னர் சிவரக்கோட்டை பகுதியில் விவசாயிகள் ஏராளமாக திரண்டு விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் சிறக்க பல்வேறு திட்டங்களை வழங்கியும், தொடர்ந்து கடந்த அம்மா ஆட்சி காலத்தில் சிப்காட்டுக்கு எதிரான அரசாணை ரத்து செய்து தங்கள் விளை நிலங்களை பாதுகாத்த எடப்பாடியார் வாழ்க என்று கோஷமிட்டனர்,

இதையடுத்து பெண்கள் பூரண கும்பத்துடன் குலவையிட்டு எடப்பாடியார் வரவேற்றனர். கள்ளிக்குடியில் எடப்பாடியார் வருகை தந்த போது எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தொழிலாளர்களும், இளைஞர்களும் திரண்டு எடப்பாடியார் வாழ்க என்று கோஷமிட்டனர். அங்கு கழக தொண்டர் எடப்பாடியாருக்கு அருகே வந்து சால்வை அணிவிக்க முற்பட்டார்.

அப்போது அவரை எடப்பாடியார் அருகில் அழைத்து அவரிடம் இருந்து சால்வையை பெற்றுக்கொண்டதோடு அன்பான வரவேற்பை கனிவுடன் ஏற்றுக்கொண்டார். மேலும் அங்கிருந்த முதியோர்கள் எல்லாம் மீண்டும் தமிழகத்தை ஆள வா ராசா என்று எடப்பாடியாரை கண்டு வாழ்த்துக்கோஷங்களை முழங்கினர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.