தூத்துக்குடி
விடியா தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் மக்கள் விரும்பு எடப்பாடியாரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றும் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
தமிழக மக்களுக்கு விரோதமாக தற்போது ஆட்சி செய்து வரும் விடியா திமுக அரசு சொத்து வரி. குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வரலாறு காணாத அளவில் உயர்ந்து விட்டதால் சொல்லொணா துயரத்தை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
ஆகவே ஸ்டாலின் தலைமையிலான விடியா அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்பி விட்டு. ஏற்கனவே அம்மாவின் ஆட்சி மூலம் மக்களுக்கு சிறப்பான முறையில் நல்லாட்சியை தந்த எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி தரவேண்டும் என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தமிழகம் முழுவதும் உள்ள 75 மாவட்டங்களிலும் உள்ள தர்காக்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்து வருகிறார்.
அதன்படி தூத்துக்குடி பெரிய பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் போது மலர்ப்போர்வை போர்த்தி சிறப்பு பிரார்த்தனை செய்தார் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன்.
இதன்பின்னர் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தீயசக்தி கருணாநிதியை எதிர்த்து 1972ம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து அதன் மூலம் மக்களுக்கு நல்லாட்சியை தந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் மறைவுக்குப்பின் அவரால் துவக்கப்பட்ட அதிமுக என்னும் பேரியக்கத்தை சிந்தாமல் சிதறாமல் தன்கண்ணின் இமைபோல் கட்டிக்காத்து ஒன்றரை கோடி தொண்டர்களையும் உருவாக்கி இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக்கி காட்டியதுடன் இந்தியாவே வியக்கும் வகையில் தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சியை நடத்திய காட்டி சாதனை செய்தார்.
இன்னும் 100 ஆண்டுகள் அம்மாவின் புகழ் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் அளவிற்கு சாதனை படைத்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்க்ள. அவர் மறைவுக்கு பின்னால் அதிமுக கட்சியை அம்மாவின் தயவால் உருவான சில கயவர்களும் அம்மாவின் பெயரைச்சொல்லி கோடிக்கணக்கில் சம்பாதித்த துரோகிகளும் சுக்குநூறாக சிதறிப்போக சதி செய்ய முயற்சி செய்து. அதன்மூலம் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை திமுகவின் துணை கொண்டு கலைத்திட முயன்றனர் எதிரிகளும், துரோகிகளும்.
துரோகிகளின் செயல்களை தூள் தூளாக்கியதுடன் அம்மாவின் நல்லாட்சியில் முதல்வராக இருந்து மக்களுக்கு நல்லாட்சி தந்து சாதனை படைத்த சேலத்தின் சிங்கம், கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஒப்பற்ற தலைவர் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி கே.பழனிசாமியை கழக பொது செயலாளராக ஆக்கிட வேண்டும்.
அதேபோல் விரைவில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் இறைவனின் பேரருளால் நடத்தி, விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு. தமிழக மக்கள் விரும்பும் அம்மாவின் நல்லாட்சியை தரக்கூடிய எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான நல்லாட்சியை தமிழகத்தில் மீண்டும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற வேண்டுதலுடன் தமிழகம் முழுவதுமுள்ள 75 மாவட்டங்களில் அமைந்துள்ள தர்காக்களில் (துவா) சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகிறேன்.
இவ்வாறு கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் கூறினார்.


















