• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மக்கள் நலனுக்கு எதிராக தி.மு.க. குடும்ப ஆட்சி- முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

மக்கள் நலனுக்கு எதிராக தி.மு.க. குடும்ப ஆட்சி- முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

May 5, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, March 31, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

மக்கள் நலனுக்கு எதிராக தி.மு.க. குடும்ப ஆட்சி- முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

by Namadhu Amma
May 5, 2022
in தற்போதைய செய்திகள்
0
மக்கள் நலனுக்கு எதிராக தி.மு.க. குடும்ப ஆட்சி- முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடலூர்

மக்கள் நலனுக்கு எதிரான குடும்ப ஆட்சியை தி.மு.க நடத்தி கொண்டிருக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசி உள்ளார்.

கடலூர் மாவட்ட பிரிண்டர்ஸ் அசோசியேசன் சார்பாக அச்சகத்தொழிலில் மூலப்பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்வை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட பிரிண்டர்ஸ் சங்கத்தலைவர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அச்சகங்களும், 20 ஆயிரம் தொழிலாளர்களும் இந்த தொழிலை நம்பி உள்ளனர். அச்சுத்தொழிலின் மூலப்பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்வாக 40 சதவீதம் திடீரென்று உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வால் நோட்டு, புத்தகங்கள் விலை உயரும். இதனால் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த ஆட்சி அமைந்தவுடன் முதலில் கட்டிட மூலப்பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்ந்தது.

தற்போது அனைத்து பொருட்களின் விலையும் உச்சத்தில் உள்ளது 1979-ம் ஆண்டு புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு காகிதத்தால் செய்தி நிறுவனம் 80 ஆயிரம் டன் உற்பத்தி நிறுவனமாக தொடங்கப்பட்டது.

அது அ.தி.மு.க ஆட்சியில் 6 லட்சம் டன் காகிதம் உற்பத்தி செய்து வருடத்திற்கு 160 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அந்த நிறுவனத்தில் தற்போது எங்கே குறைபாடு என்று அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். செயற்கையான தட்டுப்பாடை ஏற்படுத்தி அதன் மூலம் விலையேற்றம் செய்துள்ளார்களோ என்ற ஐயம் ஏற்படுகின்றது.

அச்சுத்தொழிலாளர் சங்கத்திற்கு அரசு மானிய விலையில் பேப்பர் பொருட்களை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழில் 30 லட்சம் தொழிலாளர்களும் ஒன்றரை லட்சம் அச்சகங்களும் உள்ளன. இந்த தொழிலாளர்கள் வாழ இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் ஆட்சியில் முந்திரி தொழிலாளர்கள் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவுடன் அப்போதைய அமைச்சர் டி.ஜெயக்குமார் மத்திய அரசுடன் பேசி அதை 5 சதவீதமாக குறைத்த வரலாறு எங்களுக்கு உண்டு.

மக்கள் நலனுக்கு எதிரான குடும்ப ஆட்சியை தி.மு.க நடத்தி கொண்டிருக்கின்றது. அதை மறைக்க திராவிட மாடல் என்றும், ஒன்றிய அரசு என்றும் மக்களை திசை திருப்பி கொண்டிருக்கின்றார்கள்.

திராவிட மாடல் என்றால் என்ன?. இதில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றதா சமத்துவம் சகோதரத்துவம் நிறைந்து இருக்கின்றதா. அன்பு அரவணைப்பு உள்ளதா. இந்த ஆட்சி அமைந்தவுடன் பல நிபுணர் குழுக்களை அமைத்தார்கள்.

நிதி நிர்வாக சீர்திருத்தம், நீர் மேலாண்மை என பல குழு அமைத்தார்கள். அந்த நிபுணர் குழு இதுவரை என்ன வேலை செய்திருக்கிறது. டீசல் விலையை மாநில வரி வருவாயிலிருந்து குறைப்போம் என்று சொன்ன ஸ்டாலின் இதுவரை குறைக்கவில்லை.

காஸ் சிலிண்டர் விலை தற்போது உயர்ந்து உள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திருப்பூர் பின்னலாடை நூல் 40 ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் எல்லாம் மிகவும் நிதி நெருக்கடி சூழ்நிலையில் உள்ளது. மொத்தத்தில் இந்த அரசு மக்கள் விரோத அரசாக உள்ளது.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எம்.சி.சம்பத் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சேவல் ஜி.ஜே.குமார், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.காசிநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமேகலை தஷ்ணா, தெய்வ பக்கிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.