திருவாரூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும் என்று திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் திட்டவட்டமாக கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கழக கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதன்பின்னர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் பேசியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் கழக கூட்டணி அமோக வெற்றிபெறும்.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் த.மா.கா மாவட்ட தலைவர் தினகரன், ஒன்றிய கழக செயலாளர்கள் பாப்பா சுப்ரமணியன், ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், குடவாசல் நகர செயலாளர் சாமிநாதன், பேரூர் கழக நிர்வாகிகள் அரசன்கோவன், தென்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
















