• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தீயசக்தி தி.மு.க.வை துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் எடப்பாடியார் -கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு பேட்டி

தீயசக்தி தி.மு.க.வை துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் எடப்பாடியார் -கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு பேட்டி

July 4, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, March 30, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

தீயசக்தி தி.மு.க.வை துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் எடப்பாடியார் -கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு பேட்டி

by Namadhu Amma
July 4, 2022
in சிறப்பு செய்திகள்
0
தீயசக்தி தி.மு.க.வை துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் எடப்பாடியார் -கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு பேட்டி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

விழுப்புரம்

கழகத்தை காப்பாற்றுகின்ற தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இல்லை. தீயசக்தி தி.மு.க.வை மிகவும் துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் யார் என்று சொன்னால், அது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தான் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு கூறி உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களாலும், மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களாலும் உருவாக்கப்பட்ட மாபெரும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இருபெரும் தலைவர்களும் இறந்த பிறகு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலம் அம்மாவின் ஆட்சியை சிறப்போடு கொடுத்த எடப்பாடியார், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து கழக ஆட்சிக்கு வர இருந்த நிலையில்! விடியா தி.மு.க. அரசு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டது.

அதன்பிறகு, ஒன்றரை கோடி கழக தொண்டர்கள் கழகத்திற்கு இரட்டை தலைமை தேவையில்லை, ஒற்றை தலைமை தான் சாத்தியப்படும் என எல்லோரும் எண்ணினார்கள். அம்மாவின் இறப்பிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். எதற்காக தர்மயுத்தத்தை ஆரம்பித்தார் என்பது நாடறிந்த உண்மை. தர்மயுத்தத்தில் அவர் சொன்னது சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நிற்க வேண்டும். அம்மா அவர்களின் இறப்பில் மர்மம் இருக்கிறது. விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை எடப்பாடியார் ஏற்றுக்கொண்டு சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு ஆறுமுகசாமி கமிஷன் அமைத்து, அம்மாவின் இறப்பிலே உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லி அதையும் அமைத்தார்.

தற்போது இந்த இரண்டிற்கும் முரணாக ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு சென்று வாக்குமூலம் கொடுத்த போது, கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் சென்று வாக்குமூலம் அளிக்காமல் இப்போது சென்று அம்மாவின் இறப்பில் மர்மம் இல்லை என்று சொன்னது மட்டுமல்லாமல் சசிகலாவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஒரு அப்பட்டமான ஒரு வாக்குமூலத்தை கொடுத்தார்.

இதனால் ஒன்றரை கோடி கழக தொண்டர்களும் வியந்து போனார்கள். அம்மா இறப்பில் மர்மம் இருக்கிறது. நான் முதலமைச்சராக இருந்தேன். என்ன நடந்தது என்று விசாரணை ஆணையத்திலே சொல்வேன் என்று சொன்ன ஓ.பன்னீர்செல்வம், தற்போது மாற்றுக்கருத்தாக சொல்லியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், நேற்றைய தினம் பத்திரிகை வாயிலாக பார்த்ததில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் பத்திரிகை நிருபரை கூப்பிட்டு பேட்டி கொடுத்துள்ளார். அது என்னவென்றால் தீபாவும், தீபக்கும் வேதா இல்லத்தை பிரிக்க இருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமியிடம் இதை சொல்லி வேதா இல்லத்தை நாம் வாங்கி விடலாம் என்று சொன்னார் என்றும், அதை எடப்பாடி கே.பழனிசாமி கேட்கவில்லை என்றும், ஒரு அபாண்டமான பழியை சுமத்துகிறார். இதுபோன்ற ஒரு செயல் நடக்கவே இல்லை. இப்படி ஒரு மாயையை உருவாக்கி ஒன்றரை கோடி தொண்டர்கள் மத்தியில் ஏதோ ஒரு மாயையை உருவாக்குகிறார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று சொல்லி, அரசாங்கத்தின் மூலமாக அதற்கு பணத்தை செலுத்தி அதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு செயலை செய்தார். அது நீதிமன்றத்தில் வழக்கு இருந்த காரணத்தினால் நீதிமன்றம் சொன்னது. நீங்கள் அதை திறக்கலாம் மக்கள் பயன்பாட்டிற்கு விடக்கூடாது என்றார்கள்.

முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் நாங்கள் எல்லாம் சேர்ந்து வேதா இல்லத்தை திறந்து பார்க்க கோர்ட்டு உத்தரவுக்கிணங்க அம்மாவின் இல்லத்தை பார்வையிட முடியவில்லை. இப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் அபாண்டமாக பழியை சுமத்தியுள்ளார்.

வேதா இல்லம் ஒரு தெய்வீகமான இல்லம். அம்மா தங்கி இருந்த இல்லத்தை மக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் எடப்பாடியார் செய்தார்.

எடப்பாடியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பேசுகிறார் என்றால் நாங்கள் எல்லாம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு சொல்லும், செயலும் அம்மா அவர்கள் இறந்த பிறகு, கழகத்திற்கு எதிராகவும், தி.மு.க.வுக்கு ஆதரவாகவுமே ஒவ்வொரு பேட்டியும் உள்ளது. அதேபோல் இரட்டை இலையையும் முடக்குவதற்கு அவர் செயல் செய்து கொண்டிருக்கிறார். இரட்டை இலையை முடக்குவதற்கு காரணமாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

செயற்குழு, பொதுக்குழு நடக்கின்ற போது மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அனைவரும் சொன்னது. ஒற்றை தலைமை வேண்டும். இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி ஒற்றைத்தலைமையை கொண்டு வாருங்கள் என்று தான் சொன்னார்கள். இதில் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம் தான்.

நீதிமன்றம் சென்று செயற்குழு, பொதுக்குழு நடத்தாமல் தடை வாங்கி இரண்டு மணியிலிருந்து நான்கு மணி வரை விசாரணை நடத்தி தீர்ப்பு கொண்டு வந்தார். இது எப்படிபட்ட செயல். ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கழகத்தின் மீது உண்மையிலேயே பற்று வைத்திருக்கிறார் என்று சொன்னால் இதை செய்திருப்பாரா? ஆக ஒவ்வொரு செயலும் கழஙத்தை அழிப்பதற்காக திமுகவின் கைக்கூலியாக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

இது தான் எங்களுடைய குற்றச்சாட்டு. இவர் மட்டும் தான் இரட்டை இலை சின்னத்தை வாங்கி நடைபெற உள்ள உள்ளாட்சித்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதற்கு அவர் மட்டும் தான் கடமைப்பட்டவர் போலும், எடப்பாடியாருக்கு அதில் அக்கறை இல்லை.

அவர் தி.மு.க.வுக்கு துணை போகிறார் என்று ஒருவர் பேட்டி கொடுக்கிறார் என்று சொன்னால் இது எவ்வளவு பெரிய அப்பட்டமான பொய் என்பதை தயவு கூர்ந்து சிந்தித்து பார்க்க வேண்டும்.

பொய்யான வார்த்தைகளை சொல்லி கழக தொண்டர்களை குழப்புவதற்கு ஓ.பன்னீர்செல்வம் இப்போது பயணித்து கொண்டிருக்கிறார். அவருடைய பேச்சை யாரும் கேட்பதாக இல்லை. அவர் சொல்கிறார் கருணாநிதி எங்கள் அப்பாவுக்கு பக்தர், கருணாநிதியின் பராசக்தி புத்தகத்தை என் அப்பா வைத்திருப்பார்,

அதை தினந்தோறும் காலையில் கும்பிடுவார், நானும் அதை பார்த்து படிப்பேன் என்று சொன்னவர் ஓ.பன்னீர்செல்வம்.ஒவ்வொரு முறையும் தி.மு.க.வுக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம், கழகத்தை காப்பாற்றுகின்ற தலைவராக அவர் இல்லை என்பதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.

ஏதோ ஒரு சில நிர்வாகிகள் அங்கு இருப்பார்கள் ஆனால் ஒன்றரை கோடி தொண்டர்களின் நிலை ஒற்றை தலைமை தான் வேண்டும், அதுவும் எடப்பாடியார் தலைமையில் தான் இந்த இயக்கம் இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் அம்மா சொன்னது போல்! நான் இருந்தாலும், இறந்தாலும் எனக்கு பின்னாலும் இந்த ஆட்சியும், கட்சியும் 100 ஆண்டுகள் இருக்கும் என என்று சொன்னார்களே.

அதை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னால் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒற்றை தலைமை எடப்பாடியார் தலைமையில் வந்து, தீய சக்தி தி.மு.க.வை மிகவும் துணிச்சலோடு எதிர்க்கின்ற தலைவர் யார் என்று சொன்னால், அது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தான்.

இவ்வாறு கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு தெரிவித்தார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.