• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
‘திராவிட மாடல்’ ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது

‘திராவிட மாடல்’ ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது

May 3, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, February 9, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

‘திராவிட மாடல்’ ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது

by Namadhu Amma
May 3, 2022
in தற்போதைய செய்திகள்
0
‘திராவிட மாடல்’ ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விமர்சனம்

வேலூர்

திராவிட மாடல் ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரில் மே தின விழா பொதுக்கூட்டம் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்
ஆர்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நகர கழக செயலாளர் ஜெ.கே.என்.பழனி வரவேற்றார்.

கூட்டத்தில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன், தலைமை கழக பேச்சாளர்கள் அதிரடி அரங்கநாதன், டி.சிவராஜ், எம்.டி.ராஜேந்திரன், அன்பழகன் மற்றும் பலர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் அம்மா ஆகியோர் தொழிலாளர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தனர். சென்னையில் முன்பெல்லாம் ஆட்டோ கிடையாது. அதற்கு பதிலாக கைரிக்சா இருந்தது.

மழை காலங்களில் மழையில் நனைந்தபடியே ரிக்சாவை இழுத்து செல்லும் அவல நிலையை அறிந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரெயின் கோட் வழங்கி தொழிலாளர்களின் துன்பத்தை போக்கினார்.

தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்களை அமைக்க முடியும். ஆனால் லாரி, பஸ், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட சிறு தொழில்கள் செய்பவர்கள் சங்கங்களை அமைக்க முடியாது என்பதை அறிந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல வாரியங்களை அமைத்து கொடுத்தார்.

விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வழி வகை செய்தார். விவசாயிகள் வயதாகி நலிவடையும் பொழுது அவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் வரை இலவச மருத்துவ செலவு மேற்கொள்ள வழிவகை செய்தார்.

கருவறை முதல் கல்லறை வரை எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து தமிழக மக்களின் வாழ்க்கை உயர பாடுபட்டார். கழக ஆட்சியில் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு மகத்தான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை. கடந்த தேர்தலில் 525 வாக்குறுதிகளை அள்ளி வீசி ஒரு வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகிறார். தொழிற்சாலையில் பணிபுரியும்
தமிழ்நாட்டு மக்களுக்கு 75 சதவீத வேலை உத்தரவாதம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் இன்று வரை செயல்படுத்தவில்லை. வாக்குறுதியில் குடும்ப குடும்பத் தலைவிக்கு மாதா மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ. 1500 ஆக உயர்வு, கேஸ் சிலிண்டருக்கு மானியம், கல்விக்கடன் ரத்து, நகைக் கடன், மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இன்றுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

100 நாள் வேலை 150 நாட்கள் ஆக உயர்த்தப்படும் என்று பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை ஏமாற்றி வாக்கு பெற்றனர் தி.மு.க.வினர். இன்று அந்த வாக்குறுதியை பற்றி கேட்டால் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று சொல்கிறார் ஸ்டாலின்.


மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியும் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றவில்லை
திராவிட மாடல் ஆட்சி என்று ஸ்டாலின் சொல்கிறார். திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பது ஸ்டாலினுக்கு தெரியாது. முன்பு தமிழக மக்கள் மூட நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

தந்தை பெரியார் திராவிட இயக்கத்தை உருவாக்கி தமிழகத்தில் மூட நம்பிக்கையை ஒழிக்க பாடுபட்டார். பிறகு அரசியல் கட்சியை பேரறிஞர் அண்ணா உருவாக்கினார். 1967-ல் ஆட்சிக்கு வந்தார். சில ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அது தான் திராவிட மாடல் ஆட்சி.

பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கட்சியில் கருணாநிதிக்கு மரியாதை கிடையாது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு மரியாதை இருந்தது. இதை பயன்படுத்தி கொண்ட தீயசக்தி கருணாநிதி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.


தமிழகத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு மரியாதையும், செல்வாக்கும் இருந்ததை அறிந்த கருணாநிதி பொய்யான காரணங்களை சொல்லி புரட்சித்தலைவரை கட்சியை விட்டு நீக்கினார். இதனைத்தொடர்ந்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1972-ல் கழகம் என்ற பேரியக்கத்தை தொடங்கினார். ஆட்சிக்கு வந்து அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றினார்.

1977-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உலகம் போற்றும் உன்னத திட்டமான சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து ஏழை, எளிய குழந்தைகளின் பசிப்பிணியை போக்கினார். அவர் இருந்தவரை கோட்டை பக்கமே தீயசக்தி கருணாநிதியால் வரமுடியவில்லை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பத்தாண்டு காலம் சிறந்த பொற்கால ஆட்சியை தமிழகத்தில் வழங்கினார். பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நிறைவேற்றினர். திராவிட இயக்க தலைவர் கி.வீரமணி, புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை வழங்கினார்.

திராவிட மாடல் ஆட்சியை அம்மா அவர்கள் தமிழகத்தில் ஏற்படுத்தினார். ஏழை, எளியோரின் கட்சி கழகம். இதயதெய்வம் அம்மா அவர்கள் கழகம் என்ற பேரியக்கத்தை கட்டி காத்து 18 லட்சம் தொண்டர்கள் இருந்த இயக்கத்தை, ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். பிளவுபட்ட இயக்கத்தை ஒன்று சேர்த்து இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்டு, மூன்றாவது பெரிய தேசிய கட்சியாக உருவாக்கிய பெருமை அம்மா அவர்களை சாரும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அவருடைய வாரிசாக அம்மா அவர்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டனர். தமிழகத்தில் 30 ஆண்டு காலம் கழக ஆட்சி நடைபெற்றது. 19 ஆண்டு காலம் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது.

ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்ப சமூகத்தில் பிரிவினையை உருவாக்கி அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். கழக ஆட்சியில் இஸ்லாமிய மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யப்பட்டது. ரமலான் பண்டிகை நேரத்தில் இலவசமாக நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு பல ஆயிரம் டன் அரிசி வழங்கப்பட்டது. இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள நிதிஉதவி,

உலமாக்களுக்கு பென்ஷன் திட்டம், நாகூர் தர்காவிற்கு சந்தனக்கட்டை ஆகியவை வழங்கப்பட்டது. 30 ஆண்டு கால கழக ஆட்சியில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு சிறு தீங்கு கூட ஏற்பட அனுமதிக்க வில்லை. சிறுபான்மை மக்களுக்கு என்றுமே கழகம் பாதுகாப்பாக விளங்கும்.

தனது மகனை முக்கிய பொறுப்புக்கு கொண்டுவர ஸ்டாலின் துடிக்கிறார். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சட்டம்- ஒழுங்கு முற்றிலும் கெட்டு விட்டது. சமூக விரோத சக்திகள் அதிகரித்து விட்டன.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை, கட்டப்பஞ்சாயத்து, லாக்கப் மரணம், ரவுடிகள் அட்டகாசம், லாட்டரி சீட்டு விற்பனை, கொலை , கொள்ளை அதிகரித்து சமூகம் சீரழிந்து விட்டது. யாருக்கும் பாதுகாப்பில்லை.

தொழிலாளருக்கு பாதுகாப்பு இல்லை. ஊடகமும், பத்திரிகைகளும் ஒரு சில காலம் வீடியா தி.மு.க. அரசை காப்பாற்றும். தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும். தொழிலாளர்களுக்கு என்றுமே பாதுகாப்பு வழங்கும் இயக்கம் கழக மட்டும் தான்.

இவ்வாறு கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார்.

கூட்டத்தில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன்,
மாவட்ட கழக நிர்வாகிகள் ஏ.எஸ்.சேட்டு, அமுதா சிவப்பிரகாசம், ஆர்.மூர்த்தி, சந்திரா சேட்டு, காடை மூர்த்தி,

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.