• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கொடுத்த வாக்குறுதிகளை காற்றிலே பறக்கவிடுவது தான் திராவிட மாடலா?எடப்பாடியார் கேள்வி

கொடுத்த வாக்குறுதிகளை காற்றிலே பறக்கவிடுவது தான் திராவிட மாடலா?எடப்பாடியார் கேள்வி

September 30, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, February 2, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை காற்றிலே பறக்கவிடுவது தான் திராவிட மாடலா?எடப்பாடியார் கேள்வி

by Namadhu Amma
September 30, 2022
in சிறப்பு செய்திகள்
0
கொடுத்த வாக்குறுதிகளை காற்றிலே பறக்கவிடுவது தான் திராவிட மாடலா?எடப்பாடியார் கேள்வி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

விடியா தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதி அண்ணாமலை நகரில் உள்ள அம்மா திடலில் நேற்று காலை நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி எழுச்சி உரையாற்றியதாவது:-

அறிவுப்பூர்வமான கல்வி நம்முடைய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அம்மா கொண்டு வந்த திட்டத்தை நாமும் தொடர்ந்து செயல்படுத்தினோம். இன்றைய ஆட்சியாளர்கள் அந்த ஏழைகளுக்கு, ஏழை மாணவர்களுக்கு கொடுக்கின்ற மடிக்கணினி திட்டத்தை கூட நிறுத்தி விட்டார்கள்.

மாணவர்களின் வீட்டில் விளக்கேற்றிய கட்சி கழகம். கழக அரசு. இதையும் சண்டாளர்கள் நிறுத்தி விட்டார்கள். வேதனையாக இருக்கின்றது.

நம்முடைய மாணவ செல்வங்கள் எதிர்கால இந்தியாவை, எதிர்கால தமிழகத்தை ஆளக்கூடியவர்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு அறிவுப்பூர்வ கல்வியை அளிக்க வேண்டும் என்பதற்காக அம்மா கொண்டு வந்த அற்புதமானதிட்டத்தை நிறுத்தியது தான் இந்த விடியா திமுக அரசு. இவர்கள் பேசுகிறார்கள் திராவிட மாடல் என்று.

இந்த திட்டத்தை நிறுத்தியது தான் திராவிட மாடலா. நீட் தேர்வு குறித்து ஆட்சிக்கு வருதற்கு முன்பு 2021சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்.

ஊர் ஊராக பிரச்சாரம் செய்யும்போது ஸ்டாலினும் குறிப்பிட்டார். அவரது மகன் உதயநிதியும் குறிப்பிட்டார். அவருடைய கட்சித் தலைவர்களும் ஊர், ஊராக சென்று பிரச்சாரம் செய்தார்கள்.

ஆட்சிக்கு வந்து 16 மாதம் ஆகி விட்டது. எங்கே நீட் தேர்வை ரத்து செய்தீர்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நீட் தேர்வுக்கு நீங்கள் தயாராகுங்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.

நீட் தேர்வை கொண்டு வந்தது 2010ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு. அதில் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தது. 2010 டிசம்பர் 21ல் நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும்.

அப்போது மத்தியில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர் காந்திசெல்வன். அந்த கால கட்டத்தில் தான் இந்த நீட் தேர்வை கொண்டு வருவதற்கு மத்திய அரசிதழிலில் வெளியிட்டது காங்கிரசும் திமுகவும். இதனை தடுத்து நிறுத்த அம்மா சட்டப்போராட்டம் நடத்தினார். அவரின் இறுதி மூச்சு வரை போராட்டம் நடத்தினார். அதற்குப்பிறகு நாமும் அதனைத்தொடர்ந்து செயல்படுத்தினோம்.

ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இன்றைக்கும் நீட் தேர்வு தமிழகத்திலிருந்து நீக்க வேண்டும் என்பதுதான் கழகத்தின் நிலைபாடு. ஆனால் இதில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். ஆட்சிக்கு வருதற்கு முன்பு ஒரு பேச்சு. மக்களை ஏமாற்றி வஞ்சித்து வாக்குகளை பெற்று, ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதியை காற்றிலே பறக்கவிட்டு விட்டார். இதுதான் திராவிட மாடல்.

ஏழை மாணவர்கள் மருத்துவராக வேண்டும்.பல் மருத்துவராக வேண்டும். அதிகமான மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் மற்ற மாணவர்களோடு போட்டியிட்டு, நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த கால கட்டத்திலே அவர்கள் மருத்துவராக முடியவில்லை. பல் மருத்துவராக முடியவில்லை.

அப்போது நான் சிந்தித்துப் பார்த்தேன். நானும் அரசுப்பள்ளியில் படித்தவன். அந்த எண்ணம் எனக்கு தோன்றியது. எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை. பொதுமக்கள் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களும் மருத்துவராக வேண்டும், பல் மருத்துவராக வேண்டும் அதற்கு என் சிந்தனையில் உதித்த அற்புதமான திட்டத்தை நான் செயல்படுத்த துவங்கினேன்.

7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்து அமல்படுத்தப்பட்டு, இன்றைக்கு கிட்டதட்ட 450 பேர் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலமாக மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளார்கள். 110 பேர் பல் மருத்துவராக தேர்வாகியுள்ளார்கள். அப்படி அவர்கள் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் தேர்வாகியிருந்தாலும் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை.

அதனை உணர்ந்து அரசே அந்த மருத்துவக்கல்வி கட்டணத்தை செலுத்தும் என்ற அறிவிப்பை அளித்து அந்த ஏழை எளிய மாணவர்கள் இன்றைக்கு மருத்துவ படிப்பு படிக்கிறார்கள்.

2016-17ல் 41 சதவீதம் அரசுப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் 3 லட்சத்து 80 ஆயிரம் பேரில் வெறும் 9 பேர் தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றார்கள். 9 பேர் எங்கே இப்போது 450 பேர் எங்கே. நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

9 பேர் இருந்த நிலையை மாற்றி, ஏழை எளிய மாணவர்களுக்கு அம்மா அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலமாக இன்றைக்கு மருத்துவ சீட் கிடைத்து கட்டணம் இல்லாமல் மருத்துவ கல்வியை படிக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசு தான் அம்மாவின் அரசு.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.