கோவை,
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட வேடப்பட்டி பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவுபெற்ற அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலை கடை, பேருந்து நிலையம் ஆகியவற்றை கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
கழக ஆட்சி காலத்தில் நகரப் பகுதிகளுக்கு இணையாக கிராமப்பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நோக்கில் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு திட்ட பணிகளை கிராமப் பகுதிகளில் தொடங்கி வைத்தார். தற்போது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளுக்கும் நிதி ஒதுக்கினார்.
இதையடுத்து கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட வேடப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பி.எஸ்.ஜி. பள்ளி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 8.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தையும், வன்னியம்பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தையும், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையையும் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
முன்னதாக வேடப்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு ராஜ் நாயுடு லேஅவுட் கருப்பராயன் கோவில் அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.25 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள் என்.கே.செல்வதுரை, என்.எஸ்.கருப்புசாமி, ஜிகே.விஜயகுமார்,
இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் ராஜா (எ) ராமமூர்த்தி, பேரூராட்சி கழக செயலாளர் கே.கிருஷ்ணராஜ், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவரும், 6-வது வார்டு கவுன்சிலருமான வேடப்பட்டி மா.கருணாகரன், ஒன்றிய துணைச்செயலாளர் சின்னதுரை, பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலரும், வார்டு செயலாளருமான எம்.திருமூர்த்தி, பாசறை மாவட்ட தலைவர் நிஷ்கலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.சசிகுமார், மாயா, ராம், வக்கீல் சுரேஷ், வக்கீல் இளங்கோ, மற்றும் வார்டு செயலாளர்கள் கே.சதீஷ்குமார், டி.கருப்புசாமி, அப்புராஜ், கணேசன் சந்தானம், தண்டபாணி, ரவிச்சந்திரன், ஈஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் கே. சக்திவேல், எம்.மலரவன், ஜவகர், ரமேஷ் எச்.ராஜா, டி.பழனிச்சாமி, எம்.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


















